2025 ஆம் ஆண்டிற்கான இந்திய சினிமாவின் வாழ்நாள் சாதனையாளர் விருதான தாதா சாஹேப் பால்கே விருது, மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான மோகன்லாலுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவின் தலைநகரான புது டெல்லியில் நடைபெற்ற 71ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில்... விருது பெற்ற கலைஞர்களுக்கு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்வில் இந்திய சினிமாவின் வளர்ச்சிக்காக அரும் பாடுபட்ட கலைஞர்களில் ஒருவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதான தாதா சாஹேப் பால்கே விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான தாதா சாஹேப் பால்கே விருது, மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான மோகன்லாலுக்கு வழங்கப்பட்டது.
இதனிடையே இத்தகைய விருதினை மலையாள திரையுலகினை சார்ந்த இயக்குநர் அடுர் கோபாலகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பதும் , இதனைத் தொடர்ந்து இரண்டாவதாக மலையாள சுப்பர் ஸ்டாரான மோகன்லாலுக்கு தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப்பட்டிருக்கிறது என்பதும், தமிழ் திரையுலகத்தை பொறுத்தவரை இத்தகைய விருதினை மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் - 'இயக்குநர் சிகரம்' கே. பாலச்சந்தர் மற்றும் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோருக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM