இலங்கையில் இயங்கி வரும் சர்வதேச வங்கியான ஹெச்எஸ்பிசி (HSBC) வங்கியின் சில்லறை வர்த்தக வணிகப் பிரிவை (Retail Banking Business) நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி (Nations Trust Bank PLC) 18 பில்லியன் இலங்கை ரூபாவுக்கு வாங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் செப்டம்பர் 24, 2025 அன்று கையெழுத்தாகியுள்ளது.
இந்த நடவடிக்கை, நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் இயக்குநர்கள் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த பரிவர்த்தனை வங்கியின் உள் வருவாய்கள் மூலம் நிதியளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குமுறை ஒப்புதல்களைப் பெற்ற பின்னரே இந்த பரிவர்த்தனை 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் நிறைவுபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹெச்எஸ்பிசி வங்கியின் சில்லறை வர்த்தக வணிகப் பிரிவில், பிரீமியம் வங்கிச் சேவைகள், கிரெடிட் கார்ட்கள், சில்லறை கடன்கள் மற்றும் சுமார் 200,000 வாடிக்கையாளர்களின் கணக்குகள் ஆகியவை அடங்கும்.
ஹெச்எஸ்பிசி வங்கியின் சில்லறை வர்த்தகப் பிரிவில் தற்போது பணியாற்றும் ஊழியர்களுக்கு நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும், இது ஒரு சுமுகமான மாற்றத்தை உறுதி செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கையகப்படுத்தல், இலங்கையின் சில்லறை வர்த்தக வங்கித் துறையில் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் தலைமை நிலையை வலுப்படுத்தும் என்று அந்த வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.












கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM