கடுமையான வார்த்தைகளால் பேசுவது பிள்ளைகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் - பிமல் ரத்நாயக்க

24 Sep, 2025 | 04:31 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம் ,இராஜதுரை ஹஷான்)

பிள்ளைகளை பிரம்பால்  அடிப்பதை காட்டிலும் கடுமையான வார்த்தைகளால் பேசுவது கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும்.ஒருசில பாடசாலைகளில் ஆசிரியர்கள் பிள்ளைகளை 'முட்டாள்' என்று சாடுகிறார்கள்.   இவ்வாறான நிலைமை மாற வேண்டும். நவீன உலகுக்கு பொருந்தும் வகையில் சட்டங்களை இயற்றுவோம்  என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  புதன்கிழமை (24)  நடைபெற்ற  தண்டனைச் சட்டக்கோவை  (திருத்தச்)  சட்டமூலம் மீதான விவாதத்தில்  உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

பாடசாலை கல்வியில் இருந்து விலகும் மாணவர்களின் எதிர்காலம் திசைமாறி செல்கிறது. அவ்வாறானவர்களில் பெரும்பாலானோர் பாதாள குழு உறுப்பினர் கெஹல்பத்தரே பத்ம போன்று சமூகத்துக்கு எதிரானவர்களாக மாறி விடுகிறார்கள். பிள்ளைகளை உடலியல் ரீதியில் தண்டிப்பது முறையற்றது.

ஒருசில பாடசாலைகளில் ஆசிரியர்கள் பிள்ளைகளை 'முட்டாள்' என்று கடுமையாக விமர்சிக்கும்  நிலை காணப்படுகிறது. உனக்கு கணிதம் பாடம் எப்போதும் வராது என்று மாணவர்களை  திட்டும் போது அவர்கள் உளவியல் ரீதியில் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். பாடசாலை வகுப்பறையில்  பின்வரிசையில் இருக்கும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானதாகவே அமையும்.

 பிள்ளைகளை பிரம்பால்  அடிப்பதை  காட்டிலும் கடுமையான வார்த்தைகளால் பேசுவது கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும். நாங்களும் கடுமையாக தண்டிக்கப்பட்டே படித்தோம் என்று ஒருசில குறிப்பிடுகிறார்கள். சமூக கட்டமைப்பு மாற்றமடைந்து விட்டது, ஆகவே நவீன உலகுக்கு பொருந்தும் வகையில்  சட்டங்களை இயற்ற வேண்டும்.

பிள்ளைகள் கடற்கரைக்கு செல்வதாக குறிப்பிடப்படுகிறது   சிறந்த புரிதல்களுடன் பிள்ளைகள்  கடற்கரைக்கு செல்வதில் என்ன தவறு உள்ளது. கல்வி பொதுதரார உயர்தர பரீட்சைக்கு தோற்றும் சகல பிள்ளைகளுக்கும் 5000 ரூபாய் வழங்க வேண்டும் என்று கல்வி அமைச்சராக பிரதமரிடம் குறிப்பிட்டுள்ளேன். பிள்ளைகள்  அவர்களின் இளமை காலத்தை சிறந்த முறையில் அனுபவிக்க வேண்டும். அவர்களுக்கான சுதந்திரத்தை சகல கட்டமைப்பிலும் வழங்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் நிலவும் தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறித்து...

2026-02-13 19:14:59
news-image

13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதே நடைமுறையில் சாத்தியமான...

2026-02-13 19:13:25
news-image

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளில் 600 வீடுகள்...

2026-02-13 23:01:10
news-image

மதுவரித் திணைக்களத்தின் நவீனமயமாக்கல் திட்டத்தை விரைவுபடுத்துவதற்கும்...

2026-02-13 22:58:07
news-image

நீதிமன்ற கட்டமைப்பை அரசியல் மயப்படுத்த அரசாங்கம்...

2026-02-13 19:13:53
news-image

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத்...

2026-02-13 19:12:31
news-image

கனிம வள ஆய்வு குறித்து இந்திய...

2026-02-13 19:11:57
news-image

பயங்கரவாதத்தடைச்சட்டத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டவர்களே பதிலீடாகப் புதிய...

2026-02-13 21:59:02
news-image

டித்வா புயல் வீட்டு இழப்பீடு :...

2026-02-13 19:14:24
news-image

அமரகீர்த்தி கொலை வழக்கு : மரண...

2026-02-13 22:40:17
news-image

கஸ்ஸப்ப தேரருடன் தொடர்பில்லை – சுனில்...

2026-02-13 19:09:49
news-image

தமிழ் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு இன்றி...

2026-02-13 19:10:20