மீனவர்கள் மீன் திருட்டு மற்றும் வாழ்வாதார சேதத்திற்கு எதிராக திருகோணமலை மீன்பிடி திணைக்களத்தில் ஆர்ப்பாட்டம்

24 Sep, 2025 | 12:18 PM
image

(துரைநாயகம் சஞ்சீவன்)

கட்டு வலையிலுருந்து மீன்களை திருடுபவர்களுக்கும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீரழிப்போருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி திருகோணமலை உட்துறைமுக வீதியில் உள்ள மீன்பிடி திணைக்களத்தின் முன்பாக மீனவர்கள் இன்று புதன்கிழமை (24) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருகோணமலை - அரசடி சூசையப்பர் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த ஆர்பாட்டத்தில் ஏனைய மீனவ சங்கங்களும் இணைந்து கொண்டு தங்களது ஆதரவையும் வழங்கியிருந்தார்கள்.

இதன்போது “எங்கள் வாழ்வாதாரத்தை பறிக்காதீர்கள்”, “கட்டுவலையில் களவு செய்யாதீர்கள்”, “கட்டுவலைகளை சேதமாக்காதீர்கள்”, போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியும், கோசங்களை எழுப்பியும் குறித்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.

ஆர்ப்பாட்டத்தின் பின்னர் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜரினை மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் மாவட்ட உதவிப்பணிப்பாளரிடம் கையளித்தனர்.

கட்டுவலையின் மூலம் 56 இடங்களில் அனுமதி பெற்று தாம் மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாகவும் சிலர் தோணியில் தமது கட்டுவலைக்கு அருகில் வந்து கூட்டில் சிக்கியிருக்கின்ற காணவாய் மீன்களை விசேட தூண்டில்களை பயன்படுத்தி திருடுவதோடு வலைகளையும் சேதப்படுத்தி செல்கின்றனர் இதனால் மீன்கள் வெளியேறிவிடுகின்றன இதனால் தமது வருமானம் இழக்கப்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் கவலை வெளியிடுகின்றனர். 

1935 ஆம் ஆண்டு முதல் நான்கு தலைமுறைகளாக கட்டுவலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடும் தமது வாழ்வாதாரத்தை அரசாங்கம்  பாதுகாத்து திருட்டில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமெனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 12,000 கிலோ...

2025-12-08 02:33:22
news-image

அட்டமஸ்தானாதிபதி தேரரை ஜனாதிபதியை சந்தித்தார்

2025-12-08 01:10:56
news-image

இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்து நன்றி தெரிவித்த...

2025-12-07 22:47:34
news-image

தமிழகத்திலிருந்து கப்பலில் நாட்டை வந்தடைந்த நிவாரண...

2025-12-07 22:16:46
news-image

அலுவலக புகையிரதங்களைப் பயன்படுத்தியோருக்கான விசேட பஸ்...

2025-12-07 18:34:43
news-image

சட்டவிரோத கட்டிடங்கள் நிர்மாணிக்கப்படுவதைத் தடுக்கத் தேவையான...

2025-12-07 21:04:30
news-image

அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட நீர் வழங்கல்...

2025-12-07 18:13:48
news-image

கண்டி மாவட்டத்தில் நிலச்சரிவு - மக்களை...

2025-12-07 20:57:07
news-image

புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது...

2025-12-07 20:41:57
news-image

உணவுப் பொருட்களை வாங்கும்போது அவதானமாக இருக்குமாறு...

2025-12-07 18:36:26
news-image

யாழ். பண்ணை கடலில் நீச்சலடிச்ச நால்வரில்...

2025-12-07 19:48:12
news-image

சூறாவளி டிட்வா நிவாரணத்திற்காக அமெரிக்க விமானப்படையின்...

2025-12-07 19:35:08