தேயிலை தொழிலாளர்களுக்கு உரத்தைத் தட்டுப்பாடின்றி வழங்க அரசாங்கம் நடவடிக்கை - அமைச்சர் சமந்த வித்யாரத்ன

23 Sep, 2025 | 05:38 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

தேயிலை பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தாமதமின்றி  உரிய காலத்தில் தட்டுப்பாடில்லாமல்  உரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் தேயிலை சபை மூலம் அதற்காக 2000 மில்லியன் ரூபா நிதி  ஒதுக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (23)  வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் அஜந்த கம்மெத்தகே எம்பி எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பெருந்தோட்ட கைத்தொழில் துறையில் தேயிலைப் பயிர்ச் செய்கை அண்மைக் காலமாக வீழ்ச்சியடைந்தது. முக்கியமாக உரம் தொடர்பான பிரச்சினையே அதற்கு காரணமாகியது.கடந்த காலங்களில் உரம் இல்லாத காரணத்தினால் முழுமையான விவசாயத் துறையும் பெரும் வீழ்ச்சிக்குள்ளானது. மேற்கொண்ட தீர்மானங்கள் உரத்தை இல்லாமல் செய்ததால் பெரும் நெருக்கடியை எதிர் நோக்க நேர்ந்தது. 

அந்த வகையில் தேயிலைப் பயிர்ச் செய்கையும் வீழ்ச்சியடைந்ததுடன் கடந்த வருடத்தில் அதற்காக நாம் உரம் வழங்கினோம். அதன் போது ஒரு நிறுவனத்தின் மூலம் மட்டுமே உரம் விநியோகிக்கப்படுவதாகவும் உரம் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாகவும் மக்கள் மத்தியிலிருந்து பிரச்சினைகள் எழுந்தன. ஏனைய நிறுவனங்களிடமிருந்து உரத்தை பெற்றுக் கொள்வது தொடர்பிலும் சில தரப்பினர் யோசனைகளை முன்வைத்தனர்.

அதனையடுத்து அனைத்து யோசனைகளையும் கவனத்திற் கொண்டு  உரம் விநியோகிப்பதில் புதிய முறைமை ஒன்றை உருவாக்குவதற்காக நாம் அமைச்சரவையின் அனுமதியைப் பெற்றுக் கொண்டோம்.

அத்துடன் தேயிலை சபை மூலம் 2000 மில்லியன் ரூபாவை 2025 ஆம் ஆண்டுக்கான உர நிவாரணத்துக்காக ஒதுக்கியுள்ளோம்.

நாட்டில் நூற்றுக்கு 75 வீதமான தேயிலை, சிறு தேயிலைத் தோட்ட பயிர்ச் செய்கை மூலமாகவே பெற்றுக் கொள்ளப்படுகிறது.  அந்த பயிர்ச்செய்கைகளை இலக்காகக் கொண்டு தேயிலை உரமானியத்தை வழங்குவதற்கு தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.  அதனை கிவ் ஆர் கோட் மூலம் பெற்றுக் கொடுப்பதற்கு திட்டமிட்டிருக்கிறோம். 

அரசாங்க உரக் கூட்டுத்தாபனம், உரம் தொடர்பான தேசிய செயலகம் மற்றும் பதிவு செய்யப்பட்டுள்ள பல உர நிறுவனங்கள் மூலம் விவசாயிகள் தாராளமாக உரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும். அந்த வகையில் அதற்கான கிவ் ஆர் கோட் வழங்குவதை இந்த மாதம் 26ஆம் திகதி முதற் கட்டமாக களுத்துறை மத்துகம பிரதேசத்தில் ஆரம்பிப்பதற்கும் தீர்மானித்துள்ளோம்.

அதன் மூலம் தேவையான காலத்தில் உரிய முறையில் விவசாயிகளுக்கு உரத்தைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 12,000 கிலோ...

2025-12-08 02:33:22
news-image

அட்டமஸ்தானாதிபதி தேரரை ஜனாதிபதியை சந்தித்தார்

2025-12-08 01:10:56
news-image

இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்து நன்றி தெரிவித்த...

2025-12-07 22:47:34
news-image

தமிழகத்திலிருந்து கப்பலில் நாட்டை வந்தடைந்த நிவாரண...

2025-12-07 22:16:46
news-image

அலுவலக புகையிரதங்களைப் பயன்படுத்தியோருக்கான விசேட பஸ்...

2025-12-07 18:34:43
news-image

சட்டவிரோத கட்டிடங்கள் நிர்மாணிக்கப்படுவதைத் தடுக்கத் தேவையான...

2025-12-07 21:04:30
news-image

அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட நீர் வழங்கல்...

2025-12-07 18:13:48
news-image

கண்டி மாவட்டத்தில் நிலச்சரிவு - மக்களை...

2025-12-07 20:57:07
news-image

புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது...

2025-12-07 20:41:57
news-image

உணவுப் பொருட்களை வாங்கும்போது அவதானமாக இருக்குமாறு...

2025-12-07 18:36:26
news-image

யாழ். பண்ணை கடலில் நீச்சலடிச்ச நால்வரில்...

2025-12-07 19:48:12
news-image

சூறாவளி டிட்வா நிவாரணத்திற்காக அமெரிக்க விமானப்படையின்...

2025-12-07 19:35:08