( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
3 இலட்சம் மெற்றிக் தொன் சோளம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டது முற்றிலும் பொய்யானது. இந்த ஆண்டு 67 ஆயிரம் மெற்றிக் தொன் சோளம் இறக்குமதி செய்யப்பட்டு, தேசிய மட்டத்தில் சோள உற்பத்தியை அதிகரிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் செயற்படுத்தப்பட்டுள்ளன என்று விவசாயத்துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்ற அமர்வின் போது எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டுக்களையிட்டு கவலையடைகிறேன்.அவர் தெரிந்து இவ்வாறு குறிப்பிடுகிறாரா அல்லது தெரியாமல் குறிப்பிடுகிறாரா என்பதை அறிய முடியவில்லை. தேசிய மட்டத்தில் விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு 3 இலட்சம் மெற்றிக்தொன் சோளம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது. கடந்த ஆண்டு முதற்காலப்பகுதியில் 2 இலட்சத்து 53 ஆயிரம் மெற்றிக்தொன் சோளம் இறக்குமதி செய்யப்பட்டது.இந்த ஆண்டு 67 ஆயிரம் மெற்றிக்தொன் சோளம் இறக்குமதி செய்யப்பட்டு தேசிய மட்டத்தில் சோள உற்பத்திகளை மேம்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
சோளம் உட்பட அரிசி உற்பத்தியை அதிகரிப்பதற்கு விவசாயிகளுக்கு உரிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. எதிர்வரும் மாதமளவில் 13 புதிய பயரினங்களை அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM