வரலாற்று சிறப்புமிக்க திகாமடுல்லையில் நடைபெறும் வருடாந்த எசல மகா பெரஹெரவின் ஆரம்ப நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரான நளிந்த ஜயதிஸ்ஸ கலந்துகொண்டார்.
திகாமடுல்ல வருடாந்திர எசல மகா பெரஹெர ஊர்வலம் அம்பாறை விஹாரையில் இருந்து வெள்ளிக்கிழமை (19) புறப்படத் தொடங்கியது.
ஊர்வலத்தின் தொடக்க விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் கிராமப்புற மேம்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் துணை அமைச்சர் எல்.ஜி. வசந்த பியதிஸ்ஸ ஆகியோர் அம்பாறை விஹாரையில் நடைபெற்ற மத விழாக்களில் இணைந்து, அமரபுர கல்யாணிவம்சிக நிகாயவின் கிழக்கு மாகாணத்தின் துணைத் தலைமை பீடாதிபதி வணக்கத்திற்குரிய சுஹந்தகம சீலரத்ன தேரரின் அறிவுறுத்தலின் பேரில், கலசத்தை யானை மீது வைப்பதில் பங்கேற்றனர்.
திகாமடுல்ல எசல பெரஹெரா வெள்ளிக்கிழமை (19) அம்பாறை விஹாரையில் இருந்து ஊர்வலம் தொடங்கிய நிலையில், இன்று (22) அதன் கடைசி நாளாகும். மூன்று நாட்கள் நீடிக்கும் இந்த பெரஹெர 16வது தடவையாக நடைபெறுகிறது.
மேலும் உள்ளூர்வாசிகள் உட்பட ஏராளமானோர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM