ஊழல்வாதிகளை கைது செய்வதினால் அச்சமடைந்து எதிர்க்கட்சியினர் ஒன்றிணைவு; எம்மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை - சுனில் வட்டகல

Published By: Vishnu

22 Sep, 2025 | 05:05 AM
image

(இராஜதுரை ஹஷான்)

ஊழல்வாதிகளை கைது செய்யும் போது அச்சமடைந்துள்ள எதிர்க்கட்சியினர் தற்போது ஒன்றிணைந்துள்ளார்கள். இவர்களின் உண்மை முகத்தை நாட்டு மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். எம்மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பதில் அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒருவருடம் நிறைவடைந்துள்ளது.இந்த ஒருவருட காலத்தில் பிரதான ஊழல்வாதிகள் மற்றும் குற்றவாளிகள் சட்டத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஊழல்வாதிகளை சட்டத்தின் பிரகாரம் கைது செய்யும் போது எதிர்க்கட்சியினர் அனைவரும் அச்சமடைந்து தற்போது ஒன்றிணைந்துள்ளார்கள்.தேர்தல் காலத்தில் ஒருவரை ஒருவர் திருடர் என்று விமர்சித்துக் கொண்டோம் என்று குறிப்பிடுகிறார்கள்.இவர்களின் உண்மை முகத்தை மக்கள் நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும்.

சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான ஆவணங்களை நாங்கள் தான் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை தொடர்பான ஆணைக்குழுவுக்கு சமர்;ப்பித்தோம்.இதில் ஏதேனும் பிரச்சினைகள் காணப்படுமாயின் ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்கலாம்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் -ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் ஊழல் எதிர்ப்பு சட்டம் இயற்றப்பட்டது.ஆனால் இந்த சட்டத்துக்கு உரிய அதிகாரங்கள் ஏதும் வழங்கப்படவில்லை.சட்டத்தை இயற்றி அதனை பெட்டகத்தில் போட்டு வைத்தார்கள்.

ஊழல் எதிர்ப்பு சட்டத்துக்கு எமது அரசாங்கம் தான் உயிர்கொடுத்தது. சட்டத்துக்கு உரிய ஒழுங்குவிதிகளை உருவாக்கினோம்.இந்த சட்டத்தின் பிரகாரம் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு தற்போது செயற்படுகிறது.இதனால் தான் ஊழல்வாதிகள் அச்சமடைந்துள்ளார்கள்.எம்மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு சட்டத்தின் ஊடாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெதென் கொரியாவில் மத சுதந்திரம், கருத்துச்...

2026-08-09 22:01:59
news-image

அரசியலமைப்பு திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவது...

2026-08-09 17:53:18
news-image

மாகாண சபை தேர்தல் தாமதத்திற்கு எல்லை...

2026-08-09 17:56:52
news-image

எந்தவொரு வரைவு ஆவணமும் உருவாக்கப்படவில்லை: சிறிதரனுக்கு...

2026-08-09 17:53:01
news-image

நாமல் ராஜபக்ஷ தலைமையில் புதிய அரசியல்...

2026-08-09 20:19:40
news-image

சுற்றுலா வீசாவில் வந்து சட்டவிரோதமாகப் பணியாற்றிய...

2026-08-09 18:04:26
news-image

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக...

2026-08-09 17:33:26
news-image

சிட்னி விமான நிலையத்தில் ஜெட்ஸ்டார், கட்டார்...

2026-08-09 17:16:31
news-image

அதிக விலைக்கு அரிசி விற்பனை: வெல்லவாயவில்...

2026-08-09 16:37:05
news-image

பொலிஸாரின் பெயரில் இணையவழி மோசடி ;...

2026-08-09 17:20:47
news-image

கஹட்டகஸ்திகிலியவில் கஜமுத்துக்களுடன் இருவர் கைது !

2026-08-09 16:28:07
news-image

15 ஆம் திகதிக்கு பின்னர் மழை...

2026-08-09 16:23:41