புரட்டாசி மாதம் பிறந்து விட்டால் எம்மில் பலரும் முருக பக்தர்களாக இருந்தாலும்... சிவ பக்தர்களாக இருந்தாலும்... தீவிர சைவ பக்தர்களாக இருந்தாலும் பெருமாளை மனதில் வழிபடுவர். அதே தருணத்தில் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் அருகில் இருக்கும் பெருமாள் ஆலயத்திற்கு சென்று துளசி மாலையை சாற்றி மனமுருக வழிபடுவர். இதனால் அவர்களுக்கு தொடர்ந்து கிடைக்கும் வெற்றி மேலும் அதிகரிக்கும். இந்த தருணத்தில் வெற்றி பெறுபவர்கள் பெருமாளுக்கு நைவேத்தியமாக படைக்கும் நவநீதம் என்ற பிரத்யேக நைவேத்தியத்தை பற்றி பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். இது தொடர்பாக எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சில குறிப்புகளை வழங்கியிருக்கிறார்கள்.
இதற்கு தேவையான பொருட்கள் : வெண்ணெய்- நாட்டுச் சர்க்கரை.
ரசாயனம் கலக்காத இயற்கையான முறையில் உருவாக்கப்பட்ட வெண்ணையையும், நாட்டு சர்க்கரையையும்.. விற்பனை நிலையங்களில் இருந்து வாங்கி வந்து அதனை கலந்தோ அல்லது கலக்காமல் தனித்தனியாகவோ புரட்டாசி சனிக்கிழமை தினத்தன்று அருகில் இருக்கும் பெருமாள் ஆலயத்திற்கு சென்று பெருமாளுக்கு நைவேத்தியமாக படைத்திட வேண்டும். அதன் பிறகு வழக்கம் போல் துளசி மாலையை சாற்றி பெருமாளை வழிபட வேண்டும். இதுபோன்ற வழிபாட்டில் பெருமாள் உளம் மகிழ்ந்து பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றுவார். இதனை மட்டுமே நைவேத்தியமாக படைக்க வேண்டுமா? என சிலர் கேள்வி எழுப்பக்கூடும். உங்கள் விருப்பத்திற்குரிய நைவேத்தியத்தை படைத்தாலும்.. இந்த நவநீதம் எனும் நைவேத்தியத்தை தவறாமல் இடம்பெறச் செய்து பெருமாளை வணங்கினால்... அருள் விரைவாகவும், நிறைவாகவும் கிடைக்கும்.
தொகுப்பு: சுபயோக தாசன்
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM