யாழ்ப்பாணம் மாவட்ட விசேட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (18) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பங்கேற்புடன் நடைபெற்ற இக்கூட்டத்தில் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், மாவட்ட செயலாளர் ம.பிரதீபன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

யாழ். மாவட்டத்தில் போக்குவரத்துத்துறை எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள், அவற்றுக்கான தீர்வுகள் மற்றும் எதிர்கால மேம்பாட்டுத் திட்டங்கள் பற்றி இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளன.
எவ்வாறான பகுதிகளில் வீதி அபிவிருத்திகளை மேற்கொள்ளவேண்டியுள்ளது, எப்பகுதிகளுக்கு விசேட போக்குவரத்து சேவை தேவைப்படுகிறது உள்ளிட்ட விடயங்களை அமைச்சர் சுட்டிக்காட்டிருந்தார்.
அதேபோல தீவுப் பகுதிகளுக்குரிய பாதுகாப்பான கடல் போக்குவரத்துப் பயணம் மற்றும் அதற்கான வழிமுறைகள் பற்றியும் எடுத்துரைத்திருந்தார்.
நாட்டில் ஏனைய பகுதிகளில் இருந்து யாழ். மாவட்டத்தை மையப்படுத்தியதான பொதுப் போக்குவரத்து, வர்த்தக போக்குவரத்து மற்றும் சந்தை நடவடிக்கைகளுக்கான போக்குவரத்து என்பன பற்றியும் கவனம் செலுத்தப்பட்டன.
























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM