இரவு நேரத்திலும் திறந்திருக்கும் தெஹிவளை மிருகக்காட்சிசாலை

Published By: Priyatharshan

30 Jul, 2017 | 09:37 PM
image

தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் ஒரு பிரிவு எதிர்வரும் செப்டெம்பர் 9 ஆம் திகதி முதல் இரவு நேரத்தில் திறக்கப்படவுள்ளது.

 

இரவு ஏழு மணி முதல் பத்து மணி வரையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக தெஹிவளை மிருகக்காட்சிசாலை திறக்கப்படவுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் திருமதி தம்மிக்கா மல்சிங்க தெரிவித்தார். 

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் ஆரம்பத்தில் விலங்குகள் இருக்கும் பிரிவுகள் மாத்திரம் திறக்கப்படவுள்ளது. 

உள்ளக வீதியில் பயணிப்பதற்கு வாகன வசதி வழங்கப்படவுள்ளது. புதிய சிற்றூண்டிச்சாலையும் திறக்கப்படவுள்ளது. 

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இரவு நேரங்களில் பெருமளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதன்மூலம் நாட்டுக்கு பெரும் வருமானத்தை  பெற்றுக்கொள்ள முடியும். சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இவ்வாறான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. 

எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் பின்னவல யானைகள் சரணாயலமும் இரவு நேரத்தில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதென பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13