சமையல் எரிவாயு ஒன்றின் விலை 200 ரூபாயளவில் அதிகரிக்கப்படவுள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட வேண்டுமென லிட்ரோ மற்றும் லாப்ஸ் கேஸ் கம்பனிகள் வாழ்க்கைச் செலவு குழுவிடம் கோரிக்கை விடுத்தபோதும் இந்த கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் இதுவரை விலை அதிகரிப்பது குறித்து எதுவித தீர்மானமும் எடுக்கப்படவில்லையெனவும் தெரியவருகிறது.
குறிப்பாக கேஸ் கம்பனிகள் நன்மையடைவதும் உலக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளது மற்றும் அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளமையும் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்கும் படி கோரிக்கை விடுக்கக் காரணமாக அமைந்துள்ளது.
சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்கும் படி கேஸ் கம்பனிகள் விடுத்த கோரிக்கை குறித்து கடந்த வாரம் அமைச்சரவையிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இறுதியாக 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சமையல் எரிவாயுவின் விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டது. தற்போது கொழும்பு நகரில் 12.5 கிலோ கேஸ் சிலிண்டர் 1321 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM