(எம்.மனோசித்ரா)
கல்வி அமைச்சு 2026ஆம் ஆண்டுக்கான பாடசாலை நாட்காட்டியை அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்காக வெளியிட்டுள்ளது. அதில் முஸ்லிம் பாடசாலைகளுக்கான தவணைத் திகதிகளும் குறிப்பிடப்பிட்டுள்ளன. அதற்கமைய புதிய ஆண்டின் முதல் தவணை 2026 ஜனவரி 1 ஆம் திகதி ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ், சிங்கள பாடசாலைகள்
தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளில் 2026 ஜனவரி முதலாம் திகதி முதலாம் தவணையின் முதற்கட்ட கல்வி செயற்பாடுகள் ஆரம்பமாகி பெப்ரவரி 13ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. பெப்ரவரி 14 முதல் மார்ச் 2ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது. முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் மார்ச் 3ஆம் திகதி முதல் ஏப்ரல் 10 வரை இடம்பெறவுள்ளது. ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 19 வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது.
இரண்டாம் தவணை ஏப்ரல் 20ஆம் திகதி ஆரம்பமாகி ஜூலை 24ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. மூன்றாம் தவணையின் முதற்கட்டம் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 7ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. ஆகஸ்ட் 8 முதல் செப்டெம்பர் 6ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது. மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் செப்டெம்பர் 7ஆம் திகதி முதல் டிசம்பர் 4ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
முஸ்லிம் பாடசாலைகள்
முஸ்லிம் பாடசாலைகளில் முதலாம் தவணையின் கல்வி செயற்பாடுகள் முதற்கட்டம் ஜனவரி முதலாம் திகதி முதல் பெப்ரவரி 13ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. பெப்ரவரி 14ஆம் திகதி முதல் மார்ச் 22ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது. மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் மார்ச் 23 முதல் ஏப்ரல் 10 வரை இடம்பெறவுள்ளது. ஏப்ரல் 11 முதல் 19 வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது.
முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் ஏப்ரல் 20ஆம் திகதி ஆரம்பமாகி 30ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. மே மாதம் முதலாம் திகதி முதல் 3ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது. இரண்டாம் தவணையின் முதலாம் கட்டம் மே மாதம் 4ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. மே 27 முதல் 31 வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது. இரண்டாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஜூன் முதலாம் திகதி முதல் ஜூலை 31ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் ஆகஸ்ட் 3ஆம் திகதி ஆரம்பமாகி செப்டெம்பர் 2ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. செப்டெம்பர் 3ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை விடு;முறை வழங்கப்படவுள்ளது. மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் செப்டெம்பர் 7ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 4ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் திகதி கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபத்துக்கமைய வருடத்துக்கு 210 நாட்கள் கல்வி செயற்பாடுகள் இடம்பெற வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் பரீட்சைகள் இடம்பெறும் காலப்பகுதியில் கல்வி செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாது. எனவே 2026ஆம் ஆண்டு 197 நாட்கள் கல்வி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தேசிய பரீட்சைகள்
மேலும் 2026ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளை ஆகஸ்ட்டிலும், 2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தர பரீட்சைகளை டிசம்பரிலும் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. அத்தோடு இவ்வாண்டுக்கான சாதாரண தர பரீட்சைகள் 2026 பெப்ரவரியில் நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM