பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சஹஸ்புர சிறிசர உயன மைதானத்தில் இருவரைச் சுட்டுக் கொலைசெய்த சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தமன பிரதேசத்தில் வைத்து நேற்று வெள்ளிக்கிழமை (12) பொலிஸ் விசெட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் 10 கிராம் 710 மில்லிகிராம் ஐஸ் ரக போதைப்பொருள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சஹஸ்புர சிறிசர உயன மைதானத்தில் 07.08.2025 அன்று இருவர் சுட்டுக்கொலைசெய்யப்பட்டுள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.
இது டிதாடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் துப்பாக்கிதாரி தமன பிரதேசத்தில் வைத்து நேற்று செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் அம்பாறை, தமன பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர்.
சந்தேக நபர் முன்னர் இலங்கை இராணுவத்தில் பணியாற்றி 2015 ஆம் ஆண்டு இராணுவத்திலிருந்து தப்பி ஓடியவர் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சந்தேக நபர் தமன பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தமான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM