ராஜபக்ஷர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் அரசாங்கத்தில் முக்கிய பதவிகளிலுள்ளனர் - பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தகவல்

12 Sep, 2025 | 04:48 PM
image

(எம்.மனோசித்ரா)

ராஜபக்ஷர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் இந்த அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகிக்கின்றனர். 2018ஆம் ஆண்டில் 52 நாட்கள் அரசாங்கத்தின் போது தான் தற்போதைய பாதுகாப்பு பிரதி அமைச்சர் கிழக்கு கட்டளை தளபதியாக நியமிக்கப்பட்டார். இவ்வாறான காரணிகள் வெளியே வரும் என்ற அச்சத்திலேயே விவாதத்தை நிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், 

தற்போதைய பிரதி பாதுகாப்பு அமைச்சர் கிழக்கு கட்டளை தளபதியாக பதவி வகித்த காலப்பகுதிலேயே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய பிரதான சாட்சியான சாரா ஜஸ்மின் காணாமல் போயுள்ளார். 

அவர் சாய்ந்த மருது குண்டு தாக்குதலில் உயிரிழந்ததாக நிரூபிப்பதற்கு கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் பாரிய முயற்சிகளில் ஈடுபட்டது. 

எனினும் தற்போதைய அரசாங்கம் சாரா ஜஸ்மின் உயிரிழிக்கவில்லை எனக் குறிப்பிடுகின்றது. எனவே இதில் சதித்திட்டம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அவர் கண்டு பிடிக்கப்பட வேண்டும் என்பதையே நாமும் தொடர்ச்சியாக வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம். இந்த தாக்குதல்களுடன் புலனாய்வுப்பிரிவிலுள்ள சிலரும் தொடர்புபட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சரும் ஏற்றுக் கொண்டுள்ளார். 

அவ்வாறிருக்கையில் அவர் அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகிக்கும் போது எவ்வாறு சுயாதீன விசாரணைகளை முன்னெடுக்க முடியும்? அதன் காரணமாகவே நாம் அவருக்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பித்தோம்.

எனினும் அது சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பெற்றுக் கொள்ளப்பட்ட சட்டமா அதிபரின் ஆலோசனையை சபையில் சமர்ப்பிக்குமாறு நாம் கோரிய போதிலும், அதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

நம்பிக்கையில்லா பிரேரணையை ஏற்றுக் கொள்ள முடியும் என சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியதாகவே எமக்கு தகவல்கள் கிடைத்தன. 

யாருக்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பிக்க முடியும், யாருக்கு சமர்ப்பிக்க முடியாது என்று அரசியலமைப்பில் எங்கும் குறிப்பிடப்படவில்லை.

அவ்வாறிருக்கையில் சபாநாயகர் அரசியல் ரீதியான தீர்மானத்தையே எடுத்திருக்கின்றார். இது குறித்த விவாதம் இடம்பெற்றால் அதனால் அரசாங்கத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்பதாலேயே சபாநாயகர் இவ்வாறான தீர்மானத்தை எடுத்துள்ளார். 

அரசியலமைப்பினை பாதுகாப்பதற்கு பதிலாக தனது கட்சியைப் பாதுகாக்கும் சபாநாயகராகவே இவர் காணப்படுகின்றார். கடந்த காலங்களில் ராஜபக்ஷர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் இந்த அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகிக்கின்றனர். 

2018ஆம் ஆண்டில் 52 நாட்கள் அரசாங்கத்தின் போது தான் தற்போதைய பாதுகாப்பு பிரதி அமைச்சர் கிழக்கு கட்டளை தளபதியாக நியமிக்கப்பட்டார்.

இவ்வாறான காரணிகள் வெளியே வரும் என்ற அச்சத்திலேயே விவாதத்தை நிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் நிலவும் தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறித்து...

2026-02-13 19:14:59
news-image

13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதே நடைமுறையில் சாத்தியமான...

2026-02-13 19:13:25
news-image

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளில் 600 வீடுகள்...

2026-02-13 23:01:10
news-image

மதுவரித் திணைக்களத்தின் நவீனமயமாக்கல் திட்டத்தை விரைவுபடுத்துவதற்கும்...

2026-02-13 22:58:07
news-image

நீதிமன்ற கட்டமைப்பை அரசியல் மயப்படுத்த அரசாங்கம்...

2026-02-13 19:13:53
news-image

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத்...

2026-02-13 19:12:31
news-image

கனிம வள ஆய்வு குறித்து இந்திய...

2026-02-13 19:11:57
news-image

பயங்கரவாதத்தடைச்சட்டத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டவர்களே பதிலீடாகப் புதிய...

2026-02-13 21:59:02
news-image

டித்வா புயல் வீட்டு இழப்பீடு :...

2026-02-13 19:14:24
news-image

அமரகீர்த்தி கொலை வழக்கு : மரண...

2026-02-13 22:40:17
news-image

கஸ்ஸப்ப தேரருடன் தொடர்பில்லை – சுனில்...

2026-02-13 19:09:49
news-image

தமிழ் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு இன்றி...

2026-02-13 19:10:20