ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி அபுதாபியில் செவ்வாய்க்கிழமை (9) இரவு ஆரம்பமாகியது. முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி, ஹொங்கொங்கை சந்தித்தது.
இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
ஆப்கானிஸ்தான் சார்பில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய ரமனுல்லா குர்பாஸ் 8 ஓட்டங்களுடனும் இப்ராகிம் ஜட்ரன் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து முகமது நபி 33 ஓட்டங்களுடனும் குல்படின் நைப் 5 ஓட்டங்களுடனும் ஆடுகளத்தைவிட்டு வெளியேறினர். 13 ஓவர்களில் 95 ஓட்டங்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடிக்குள்ளான ஆப்கானிஸ்தானை செடிகுல்லா அடலும், அஸ்மத்துல்லா ஒமர்ஜாயும் தூக்கி நிறுத்தினர்.
குறிப்பாக இறுதிக் கட்டத்தில் அதிரடி காட்டிய ஒமர்ஜாய், வேகப்பந்து வீச்சாளர் ஆயுஷ் சுக்லாவின் ஓவரில் ‘ஹெட்ரிக்’ சிக்சர் மற்றும் பவுண்டரி அடித்து தனது முதலாவது அரைசதத்தை 20 பந்துகளில் எட்டினார். இதன் மூலம் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிவேகமாக அரைச்சதம் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர் என்ற சிறப்பையும் பெற்றார். இதற்கு முன்பு முகமது நபி, குல்படின் நைப் தலா 21 பந்துகளில் அரைச்சதம் அடித்ததே சாதனையாக இருந்தது. ஒமர்ஜாய் 53 ஓட்டங்களின் (21 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்) பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
இந்நிலையில், 20 ஓவர்கள் நிறைவில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்கு 188 ஓட்டங்களை குவித்தது. 3 முறை ஆட்டமிழப்பிலிருந்து தப்பிய செடிகுல்லா அடல் 73 ஓட்டங்களுடன் (52 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தார்.
பின்னர் 189 ஓட்டங்களை இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஹொங்கொங் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 94 ஓட்டங்களையே எடுக்க முடிந்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் 94 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாபர் ஹயாத் (39 ஓட்டங்கள்), அணித் தலைவர் யாசிம் முர்தசா (18 ஓட்டங்கள்) ஏனையவர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் பரூக்கி, குல்படின் நைப் ஆகியுார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM