(எம்.ஆர்.எம் வசீம்,இராஜதுரை ஹஷான்)
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (09) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் தொடர்பான தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் தீர்மானத்துக்கு ஆதரவாக 163 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன்,எதிராக எந்த வாக்குகளும் அளிக்கப்படவில்லை. அதற்கமைய இந்தத் தீர்மானம் மூன்றில் இரண்டு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
2025.08.01 ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த ஒப்பந்தம் முதலீடுகளை மேம்படுத்துதல் மற்றும் பரஸ்பர பாதுகாப்பு குறித்து இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசிற்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையில் 2025 பெப்ரவரி 12 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது,அதற்கமைய, இது ஐக்கிய அரபு இராச்சியத்தின் மக்களால் அல்லது அந்நாட்டின் சட்டங்களின் கீழ் நிறுவப்பட்ட அல்லது அமைக்கப்பட்ட கூட்டுத்தாபனங்கள், நிறுவனங்கள் அல்லது எனைய அமைப்புக்களால் இலங்கையில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்குமான ஓர் ஒப்பந்தம் ஆகும்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM