பெரும்போக விவசாயத்தில் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட பாதிப்பை ஆராய குழு அமைக்க வேண்டும் என எஸ். சிறிதரன் வலியுறுத்தல்

09 Sep, 2025 | 05:21 PM
image

(எம்.ஆர்.எம் வசீம், இராஜதுரை ஹஷான்)

பெரும்போக விவசாயத்தில் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட பாதிப்பு  தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்கு  சிறுபோக விவசாயம் முடிவடைந்து, பெரும்போக விவசாயத்துக்காக விவசாய நிலங்கள் தயார்படுத்தப்படுகின்ற போது பதில் கிடைக்கிறது. அமைச்சரால் குறிப்பிடப்பட்ட விடயங்களை ஏற்க முடியாது. குழு ஒன்று அமைத்து  இவற்றை ஆராயுங்கள் என்று  இலங்கைத் தமிழரசுக் கட்சியின்   யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை  (09) நடைபெற்ற அமர்வின் போது  அமர்வின் போது கடந்த  2025. பெப்ரவரி மாதம் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன்  முன்வைத்த கேள்விகளுக்கு  விவசாயத்துறை அமைச்சர் லால் காந்த வருமாறு பதிலளித்தார்.

இக்காலப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் கிட்டத்தட்ட 83,252 ஏக்கர்  நிலம் பாதிக்கப்பட்டு, 70,540 விவசாயிகள்  பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு  நட்டஈடு வழங்குவதற்காக  7,450 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 24 மாவட்ட விவசாயிகளுக்கும் நிவாரணமளிக்கப்பட்டுள்ளது என்றார்.

இதனைத் தொடர்ந்து எழுந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன்,  நான் இந்த கேள்விகளை கேட்டு 08 மாதங்களும், 04 நாட்களும் கடந்துள்ள நிலையில் தான்  அமைச்சர் பதிலளிக்கிறார்.  பெரும்போக விவசாயத்தில் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் கேள்வியெழுப்பினேன்.

தற்போது பெரும்போகம் முடிவடைந்து, சிறுபோகம்  விவசாயம் முடிவடைந்து பெரும்போக விவசாயத்துக்காக விவசாய நிலம் தயார்ப்படுத்தப்படுகின்ற நிலையில் தான்  தற்போது பதில் கிடைக்கப்பெற்றுள்ளது.

24 மாவட்டங்களுக்கும்  நட்டஈடு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிடுகிறார்.ஆனால் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கப்படவில்லை.ஆகவே  அமைச்சர் குறிப்பிட்ட விடயங்களை  ஏற்க முடியாது. குழு ஒன்றை நியமித்து விசாரியுங்கள் என்று வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து எழுந்து உரையாற்றிய  அமைச்சர் லால் காந்த,கிளிநொச்சி மாவட்டத்தில் 279 ஏக்கர் நிலப்பரப்பில 139 விவசாயிகள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 27 மில்லியன் ரூபாய் வரையில் நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது.இந்த அறிக்கையை நான் ஏற்கிறேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்போடியா - தாய்லாந்து யுத்தம் நிறுத்தக்...

2025-12-16 10:33:26
news-image

இலங்கைக்கும் கசகஸ்தான் குடியரசுக்கும் இடையிலான உறவைப்...

2025-12-16 10:34:43
news-image

போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட்...

2025-12-16 10:27:32
news-image

பண்டிகை காலத்தில் வழிபாட்டுத் தலங்களில் விசேட...

2025-12-16 10:19:20
news-image

135 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட...

2025-12-16 10:09:02
news-image

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார...

2025-12-16 10:06:19
news-image

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: சந்தேகநபருடன்...

2025-12-16 09:57:17
news-image

நீரில் மூழ்கி ஒருவர் மாயம்

2025-12-16 09:39:03
news-image

அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்க...

2025-12-16 09:38:28
news-image

பல குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் போதைப்பொருளுடன்...

2025-12-16 09:10:48
news-image

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து கொடுப்பனவு இன்று...

2025-12-16 09:09:33
news-image

பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட ஐந்து...

2025-12-16 08:51:12