83 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை தம்வசம் வைத்திருந்த இருவருக்கு விளக்கமறியல்!

09 Sep, 2025 | 03:07 PM
image

83 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக தம்வசம் வைத்திருத்தல் மற்றும் இத்தாலியில் வேலைவாய்ப்பு பெற்றுத தருவதாக கூறி பணம் பறித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட பெண் உட்பட இருவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா நீதவான் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை (08) உத்தரவிட்டுள்ளது.

வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய ஆணும் கணேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய பெண்ணுமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கணேமுல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹெரகொல்ல பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (07) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 83 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளுடன் பெண் உட்பட இருவர் கைதுசெய்யப்பட்ட பெண் உட்பட இருவர் கணேமுல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், 83 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளும் வேறு நபர்களுக்கு சொந்தமான கடவுச்சீட்டுகள் என தெரியவந்துள்ளது.

அத்துடன் கைதுசெய்யப்பட்ட இருவரும் இத்தாலியில் வேலைவாய்ப்பு பெற்றுத தருவதாக கூறி பல்வேறு நபர்களிடமிருந்து பணம் பறித்துள்ளதாகவு் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட இருவரும் கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கணேமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லிந்துலையில் நீரில் மூழ்கிய மாணவனை தேடும்...

2026-07-14 12:24:12
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-07-14 12:21:34
news-image

ஜனாதிபதிக்கு இலங்கை நீதிச்சேவை சங்கம் கடிதம்

2026-07-14 12:15:12
news-image

மூதூர் சந்தையில் கைப்பற்றப்பட்ட 500 கிலோ...

2026-07-14 11:58:00
news-image

சிறைச்சாலை அதிகாரிகளின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை;...

2026-07-14 11:31:55
news-image

மத்தள விமான நிலையத்தை நிர்வகிக்க 19...

2026-07-14 11:31:37
news-image

இலங்கையில் பயணிகளை ஏற்றிச்செல்ல ட்ரோன் சேவை...

2026-07-14 11:26:29
news-image

யாழ்ப்பாண சிறைச்சாலை வளாகத்தில் பறந்த ட்ரோன்...

2026-07-14 11:14:47
news-image

நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை ஆண்டிறுதிக்குள்...

2026-07-14 10:45:46
news-image

ஜனாதிபதி தலைமையில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை...

2026-07-14 10:47:25
news-image

தலைமன்னாரில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட ஷாம்பூ...

2026-07-14 12:12:37
news-image

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பிரான்ஸ் முக்கிய...

2026-07-14 10:22:54