பிரான்ஸில் புதிய அரசியல் நெருக்கடி எழுந்துள்ள நிலையில் பிரதமர் பதவியிலிருந்து பிரான்காய்ஸ் பேரோ விலகியுள்ளார்.
அந்நாட்டு பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (08) நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பேரோவுக்கு போதிய ஆதரவு இல்லாததால் அவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் 364 பேர் பேரோவுக்கு எதிராகவும் 194 பேர் ஆதரவாகவும் வாக்களித்தனர்.
பேரோவின் வரவுசெலவுத் திட்டம் அவரது கூட்டணிக் கட்சிகளிடையே சரியாக வரவேற்கப்படவில்லை. அது அவருக்குப் பாதகமாக அமைந்தது.
பேரோவின் பதவி விலகலை ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் செவ்வாய்க்கிழமை (09) ஏற்றுக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டது.
மக்ரோன் அடுத்த பிரதமராக யாரைத் தெரிவு செய்வது என்ற குழப்பமான சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளார். மக்ரோனின் பதவிக் காலத்தில் இதுவரை ஆறு நபர்கள் பிரதமராகப் பொறுப்பு வகித்தனர். தற்போது அவர் ஏழாவது நபரைத் தேடுகிறார்.
இன்னும் சில நாட்களில் மக்ரோன் அடுத்த பிரதமரைத் தெரிவு செய்வார் என பிரான்ஸ் ஜனாதிபதி அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதையடுத்து பிரதமர் பதவிக்கான பொதுத் தேர்தல் நடக்காது என்பது உறுதியாகியுள்ளது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM