(எம்.ஆர்.எம்.வசீம்)
இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பது தொடர்பில் தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ள பிரேரணைகள் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்த தவறுமானால் தற்போது ஆரம்பித்துள்ள சட்டப்படி வேலை செய்யும் நடவடிக்கையை வேலை நிறுத்தப் போராட்டம் வரை விரிவுபடுத்துவதாக மின்சார சபையின் சுதந்திர சேவை சங்கத்தின் செயலாளர் பிரபாத் பிரியன்த தெரிவித்தார்.
இலங்கை மின்சார சபை சுதந்திர சேவை சங்கம் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
மின்சாரசபை மறுசீரமைப்புக்கு நாங்கள் எதிர்ப்பு இல்லை. ஆனால் அரசாங்கம் நீதிமன்ற தீர்ப்புக்கு மாற்றமாகவே மறுசீரமைப்பு நடவடிக்கையை மேற்கொள்கின்றனர்.அதனாலே நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். இதுதொடர்பாக 25 தொழிற்சங்கங்கள் கைச்சாத்திட்டு, 24 கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஒன்றை ஜனாதிபதிக்கு அனுப்பி இருக்கிறோம். எமது கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வொன்றை பெற்றுத்தரும்படி தெரிவித்து நாங்கள், கடந்த 4 நாட்களுக்கு முன்னர் சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தை ஆரம்பித்தோம்.
ஆனால் எமது இந்த போராட்டம் தொடர்பில் அரசாங்க தரப்பில் இருந்து இதுவரை எந்த சாதகமான பதிலும் கிடைக்கவில்லை. அரசாங்கத்தின் நடவடிக்கையை பார்க்கும் போது, எமது இந்த போராட்டத்தை தொழிற்சங்க போராட்டம் வரை கொண்டுசெல்ல தூண்டும் வகையிலே இருக்கிறது.
அதனால் எமது கோரிக்கையை கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு தீர்மானித்திருந்தால், அது அரசாங்கம் எடுத்திருக்கும் மிகவும் பலவீனமான தீர்மானம் என்றே எமக்கு சொல்ல வேண்டி ஏற்படுகிறது.
எதிர்வரும் 16ஆம் திகதிக்கு எமது சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்கு நாங்கள் செல்வோம். இதன்போது மறுசீரமைப்பு குழுக்களில் இருந்து விலகுவதற்கும் நாங்கள் தீர்மானம் எடுத்திருக்கிறோம். அதேநேரம் 16ஆம் திகதிக்கு பின்னர் சனி, ஞாயிறுக்கிழமை நாட்களில் எமது அனைத்து காரியாலயங்களையும் மூடிவிடுவதற்கும் தீர்மானித்திருக்கிறோம். அதனால் எமது போராட்டத்தை இலகுவாக நினைக்க வேண்டாம் என நாங்கள் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுக்கிறோம்.
எமது கோரிக்கைக்கு தீர்வு வழங்க அரசாங்கம் தவறினால், அரசாங்கத்துக்கே பாதிப்பு ஏற்படும். அதனால் 21ஆம் திகதிக்கு பின்னர் வரலாற்றி ஒருபோதும் இடம்பெறாத பாரிய தொழிற்சங்க போராட்டம் ஒன்றுக்கு நாங்கள் செல்வதற்கு வழி ஏற்படுத்த வேண்டாம் என அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM