(இராஜதுரை ஹஷான்)
போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கும்,கட்சிக்கும் இடையில் எவ்வித தொடர்பும் கிடையாது. இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கம் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமா என்பது சந்தேகத்துக்குரியது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
போதைப்பொருள் குற்றச்சாட்டில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பிரதேச சபை உறுப்பினர் கட்சியில் இருந்து உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளார்.
இவருக்கும்,கட்சிக்கும் இடையில் எவ்வித தொடர்பும் கிடையாது.நபர்களின் தனிப்பட்ட செயற்பாடுகளுக்கு கட்சி பொறுப்புக்கூற முடியாது.அவ்வாறு பொறுப்புக்கூற வேண்டுமாயின் மக்கள் விடுதலை முன்னணியும் பொறுப்புக்கூற வேண்டும்.
ஏனெனில் மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினர் இப்ராஹிமின் இரண்டு மகன்மார்கள் தான் தற்கொலை குண்டுதாரிகளாக மாறி உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களை நடத்தினார்கள்.ஆகவே குறுகிய அரசியல் நோக்கத்துடன் செயற்படுவதை அரசாங்கம் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கம் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமா என்பது சந்தேகத்துக்குரியது.அரசாங்கம் இதனை தனது முழுமையான அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்கிறது என்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM