இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள பல நாடுகளுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (07) முழு சந்திர கிரகணம் நிகழும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.
இன்றிரவு 8.58 மணி முதல் நாளை திங்கட்கிழமை (08) அதிகாலை 2.25 மணி வரை சுமார் 5 மணி நேரம் 27 நிமிடங்கள் இந்த சந்திர கிரகணத்தைக் காண ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
இன்றிரவு 11.01 மணி முதல் நாளை அதிகாலை 12.22 மணி வரை முழு சந்திர கிரகணத்தின் முழுமையான தெரிவுநிலை நிகழும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த சந்திர கிரகணம் உலக மக்கள் தொகையில் சுமார் 85 சதவீதமானோருக்கு முழுமையான அல்லது பகுதி கிரகணமாகத் தெரியும்.
2028 வரை இலங்கையர்களுக்கு இதுபோன்ற முழு சந்திர கிரகணத்தைக் காண வாய்ப்பு இருக்காது என்றும் பேராசிரியர் இதன்போது தெரிவித்துள்ளார்.
இந்த அரிய நிகழ்வைப் பயன்படுத்தி, பாடசாலை மட்டத்தில் இரவு வான கண்காணிப்பு முகாம்களை நடத்துவது பொருத்தமானதாக இருக்கும் என்றும் பேராசிரியர் சந்தன ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM