இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 (ரி20) கிரிக்கெட் போட்டியில் சிம்பாப்வே அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று, தொடரை 1–1 என்ற அடிப்படையில் சமநிலைப்படுத்தியுள்ளது.
இன்று 06ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற சிம்பாப்வே அணி முதலில் களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 17.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 80 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதில் கமில் மிசார அதிகபட்சமாக 20 ஓட்டங்கள் பெற்றார்.
வெற்றிக்கான இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 81 ஓட்டங்களை அடைய களமிறங்கிய சிம்பாப்வே அணி, 14.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எளிதில் எட்டியது.
இதன் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று, 1–1 என்ற அடிப்படையில் சமநிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM