எம்முடைய நரம்பியல் மண்டலங்களில் ஏற்படும் பாதிப்புகளை குறிப்பாக மூளை, தண்டுவடம் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகளை துல்லியமாக அவதானிக்க இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி எனும் நவீன பரிசோதனை முறை பலன் அளித்து வருவதாக வைத்தியம் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
நரம்பியல் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால் அதனை உறுதிப்படுத்திக் கொள்ளவும் , பாதிப்பு ஏற்பட்டிருக்கும் இடத்தை துல்லியமாக அவதானிக்கவும், இண்டர்வென்ஷனல் ரேடியாலஜி எனும் பரிசோதனை முறை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது.
ஏனெனில் இத்தகைய பரிசோதனை முறை பாதுகாப்பானதாகவும், துல்லியமானதாகவும் , ஏனைய பரிசோதனை முறைகளை விட விரைவானதாகவும் இருக்கிறது என வைத்தியர்கள் குறிப்பிடுகிறார்கள்.
ரேடியாலஜி எனப்படும் கதிர்வீச்சியல் துறையில் புதிதாக வளர்ந்து வரும் துணை பரிசோதனை முறையாக இண்டர்வென்ஷனல் ரேடியாலஜி பிரிவு திகழ்கிறது. இந்த பரிசோதனை முறையில் சிடி ஸ்கேன்- அல்ட்ரா சவுண்ட்- எக்ஸ்ரே -ஆகிய நோயறி பரிசோதனை முறை- ஒருங்கிணைக்கப்பட்ட அம்சமாகும்.
இந்த தருணத்தில் தோல், தமனி, சிரை ஆகியவற்றின் வழியாக சிறிய நுண்ணிய குழாயை உட்செலுத்தி பாதிப்பின் தன்மையையும் , வீரியத்தையும் துல்லியமாக அவதானிக்க இயலும். மேலும் இத்தகைய பரிசோதனையின் போது பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து எளிதாக திசு பரிசோதனையையும் மேற்கொள்ள இயலும். அத்துடன் பாதிப்பிற்கான பிரத்யேக மருந்தியல் சிகிச்சை மற்றும் பிரத்யேக நுண் துளை சத்திர சிகிச்சையையும் மேற்கொள்ள இயலும்.
வைத்தியர் நரேன் தொகுப்பு அனுஷா.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM