தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு அரசாங்கத்தில் முன்னுரிமை வழங்கவேண்டும் - சம்பிக்க ரணவக்க 

04 Sep, 2025 | 03:45 PM
image

(இராஜதுரை ஹஷான்)

வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்தமை மகிழ்ச்சிக்குரியது. இந்த ஆணையை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு அரசாங்கத்தில் முன்னுரிமை வழங்கவேண்டும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பிலான கலந்துரையாடலின்போது கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அரசியல்வாதிகள் அம்மக்களின் அடிப்படை பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தியே அரசியல் செய்தார்கள். செல்வநாயகம் மற்றும் பொன்னம்பலம் போன்றவர்கள் வாராந்த அரசியலில் ஈடுபட்டார்கள். வடக்குக்கு சென்று ஒன்றை குறிப்பிட்டுவிட்டு கொழும்புக்கு வந்து பிறிதொன்றை குறிப்பிட்டார்கள்.

 30 வருடகால யுத்தம் நாட்டில் இழப்புக்களையும் வேதனைகளையும் மாத்திரமே மிகுதியாக்கின. வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் இன்றும் அதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே இந்நிலைமை மாற்றம் பெற வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்தமை மகிழ்ச்சிக்குரியது. இந்த ஆணையை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். வடக்கு மற்றும் கிழக்குக்கான அபிவிருத்திகளை அரசாங்கம் விரிவுப்படுத்த வேண்டும்.

தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு அரசாங்கம் முன்னுரிமையளிக்க வேண்டும். பிரதி சபாநாயகராக முஸ்லிம் பிரதிநிதியொருவர் நியமிக்கப்பட்டமை வரவேற்கக்கத்தது. சிறந்த முற்போக்கான தீர்மானங்களுக்கு நாங்களும் ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி...

2026-04-21 16:19:25
news-image

தீபச்செல்வனின் 5 வகையான நூல்கள் தடுத்து...

2026-04-21 15:41:48
news-image

கால்நடைகள் மீது காரைநகரில் அடாவடி ;...

2026-04-21 15:41:27
news-image

பயாகலையில் “குடு சலிந்துவின்” நெருங்கிய சகாக்கள்...

2026-04-21 15:26:29
news-image

பிள்ளையான் மீதான உயிர்த்த ஞாயிறு குற்றச்சாட்டுகள்...

2026-04-21 15:26:07
news-image

யாழில் போலி காணி உறுதி தயாரிப்பு...

2026-04-21 15:22:29
news-image

மாகும்புரவில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமையுடன் புதிய...

2026-04-21 15:16:08
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நிபந்தனையற்ற நீதி...

2026-04-21 14:58:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் அரசியல்...

2026-04-21 14:50:48
news-image

'கஞ்சிபானை இம்ரான்' உடன் தொடர்புடைய முக்கிய...

2026-04-21 14:49:33
news-image

வவுனியாவில் டித்வா புயலினால் பகுதியளவில் சேதமடைந்த...

2026-04-21 14:49:11
news-image

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை 

2026-04-21 14:05:10