நீதியை நிலைநாட்டவும் பாதிக்கப்படக்கூடியவர்களைப் பாதுகாக்கவும் எதிர்கால சந்ததியினருக்கு அமைதியைப் பாதுகாக்கும் இலங்கையை உருவாக்கவும் மீலாதுன் நபி தினத்தில் உறுதிமொழி எடுப்போம் - பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் 

04 Sep, 2025 | 02:09 PM
image

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நீடித்த செய்தியை நாம் அனைவரும் சிந்திப்போம். கண்ணியத்துடன் வாழவும், நீதியை நிலைநாட்டவும், பாதிக்கப்படக்கூடியவர்களைப் பாதுகாக்கவும், எதிர்கால சந்ததியினருக்கு அமைதியைப் பாதுகாக்கும் இலங்கையை உருவாக்கவும் இந்த மீலாதுன் நபி தினத்தில் நாம் அனைவரும் உறுதிமொழி எடுப்போம் என தேசிய ஒருமைப்பாடு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் தெரிவித்துள்ளார்.

மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:

அல்லாஹ்வின் இறுதித் தூதராகவும், மனிதகுலம் முழுவதற்கும் வழிகாட்டியாகவும் முஸ்லிம்களால் கருதப்படும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறப்பு மற்றும் மரணத்தை நினைவுகூரும் நாளே மீலாதுன் நபி தினமாகும்.

இதன் முக்கியத்துவம் ஆன்மீக மற்றும் சமூக பரிமாணங்களில் உள்ளது. இது முஸ்லிம்களுக்கு நபி(ஸல்) அவர்களின் முன்மாதிரியான தன்மை, அவரது கருணை, பணிவு மற்றும் தலைமைத்துவம் ஆகியவற்றைப் பற்றி சிந்திக்க ஒரு வாய்ப்பை வழங்குகிறது. 

மேலும் மத எல்லைகளை மீறும் இந்த காலத்தால் அழியாத மதிப்புகளை ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் நினைவூட்டுகிறது.

இலங்கை உட்பட பல நாடுகளில் மீலாதுன் நபி தினமானது ஒரு தேசிய விடுமுறைத் தினமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் முஸ்லிம் சமூகத்திற்கான மரியாதையாகவும் சமயங்களுக்கு இடையிலான சகவாழ்வின் முக்கியத்துவத்தையும் குறிக்கிறது. இந்த தினத்தை விழாவாக கொண்டாடுவது மட்டுமல்லாது, முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் நபியவர்களின் முன்மாதிரியான வாழ்க்கையைப் பின்பற்றுவதற்கும் எம்மை அர்ப்பணித்தல் வேண்டும்.

இலங்கையின் பல்வேறு மாவட்டங்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தேசிய மீலாதுன் நபி விழாவினை நாடு முழுவதும் கொண்டாடுவதன் மூலம் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையை வலுப்படுத்துவதோடு, இலங்கையினை வளப்படுத்தும் பன்முகத்தன்மையை வெளிப்படுத்துகின்றது. 

இந்த புனிதமான சந்தர்ப்பத்தில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நீடித்த செய்தியை நாம் அனைவரும் சிந்திப்போம். கண்ணியத்துடன் வாழவும், நீதியை நிலைநாட்டவும், பாதிக்கப்படக்கூடியவர்களைப் பாதுகாக்கவும், எதிர்கால சந்ததியினருக்கு அமைதியைப் பாதுகாக்கும் இலங்கையை உருவாக்கவும் இந்த மீலாதுன் நபி தினத்தில் நாம் அனைவரும் உறுதிமொழி எடுப்போம் என தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு பொலன்னறுவை...

2025-12-13 15:25:09
news-image

நான்கு பேருடன் பயணித்த வேன் கால்வாயில்...

2025-12-13 13:27:28
news-image

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பான தகவல்களைப்...

2025-12-13 15:00:57
news-image

கடும் மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு...

2025-12-13 14:36:56
news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பில் 590...

2025-12-13 14:39:38
news-image

15 வயது மாணவி மீது பாலியல்...

2025-12-13 12:29:31
news-image

அலவத்துகொடை - அங்கும்புர பிரதான வீதியில்...

2025-12-13 14:45:21
news-image

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிலாபம் வைத்தியசாலையை சுகாதார...

2025-12-13 14:54:39
news-image

சம்மாந்துறையில் மான் இறைச்சி, துப்பாக்கி மற்றும்...

2025-12-13 12:06:52
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Asriel...

2025-12-13 12:03:47
news-image

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் உள்நாட்டு, வெளிநாட்டு...

2025-12-13 11:47:30
news-image

புத்தளத்தில் காணி ஒன்றில் இருந்து ஆயுதங்கள்...

2025-12-13 11:46:37