இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் அசுமார் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, குறித்த வெள்ளப்பெருக்கினால் 1,400 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளத்தினால் சுமார் 3 இலட்சத்து 54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் எச்சரிக்கை மட்டத்தை எட்டியதை அடுத்து, குறித்த மாநிலத்தின் 23 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
தாழ்வான பகுதிகள் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சுமார் 20 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அதேநேரம், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தங்குமிடம் மற்றும் அத்தியாவசிய வசதிகளை வழங்க நூற்றுக்கணக்கான நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
1988 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மாநிலம் கண்ட மிக மோசமான வெள்ளப்பெருக்கு இது என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், குறிப்பிட்டுள்ளார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM