(நா.தனுஜா)
ஷங்காய் கூட்டுறவு அமைப்பின் 25ஆவது மாநாட்டில் சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கினால் முன்மொழியப்பட்ட உலகளாவிய ஆட்சியியல் செயற்திட்டத்தை ஆக்கபூர்வமான விதத்தில் தாம் அணுகுவதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஷங்காய் கூட்டுறவு அமைப்பின் 25ஆவது அரச தலைவர்கள் மாநாடு கடந்த மாதம் 31ஆம் திகதி ஆரம்பமாகி, திங்கட்கிழமை (1) வரை சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்றது.
ஷங்காய் கூட்டுறவு அமைப்பின் கண்காணிப்பாளர் நாடுகளில் இலங்கையும் உள்ளடங்குகிறது. அதனடிப்படையில் இம்மாநாடு குறித்தும், மாநாட்டில் சீன ஜனாதிபதி சி ஜின்பிங் ஆற்றிய உரை குறித்தும் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே அமைச்சர் விஜித்த ஹேரத் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அப்பதிவில், 'இறையாண்மைசார் சமத்துவம், சட்டத்தின் ஆட்சி, பல்லினத்தன்மை, மக்கள்மைய அபிவிருத்தி, செயல் அடிப்படையிலான ஒத்துழைப்பு என்பவற்றை பிரதான கோட்பாடுகளாகக்கொண்டு உருவாக்கப்பட்ட ஷங்காய் கூட்டுறவு அமைப்பின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற மாநாட்டில் சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கினால் முன்மொழியப்பட்ட உலகளாவிய ஆட்சியியல் செயற்திட்டத்தையும், அங்கு ஆராயப்பட்ட உலகளாவிய அபிவிருத்தி, பாதுகாப்பு, மக்கள்மயமாக்கல் செயற்திட்டங்கள் உள்ளிட்ட விடயங்களையும் நான் மிகவும் ஆக்கபூர்வமானவையாகக் கருதுகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM