கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் பல கிராமங்கள் அழிவடைந்துள்ளதுடன், உயிரிழந்தோரின் எண்ணிக்கை சுமார் 800 ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரம் குறித்த அனர்த்தத்தில் சிக்குண்டு 2 ஆயிரத்து 800 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
தாலிபான்களால் முன்னெடுக்கப்படும் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், குறித்த அனர்த்தத்தில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவலின்படி, கிழக்கு ஆப்கானிஸ்தானில 6.0 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் பதிவானதை தொடர்ந்து, அதன் அண்டை நகரான நங்கஹார் (Nangarhar) மாகாணத்திலுள்ள ஜலலாபாத்( Jalalabad) நகருக்கு அருகே குனர் (Kunar) மாகாணத்திலுள்ள சில நகரங்களைத் தாக்கியது.
இதனால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நங்கஹார் மாகாணத்தில் உள்ள ஜலலாபாத் நகரிலிருந்து 27 கிலோமீற்றர் தொலைவில், குறித்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
சுமார் 8 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
குறித்த நிலநடுக்கத்தையடுத்து பல அதிர்வுகள் பின்னர் ஏற்பட்டதாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இடிந்து விழுந்த கட்டிடங்களுக்குள்ளிருந்து காயமடைந்தவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM