பிரதி பாதுகாப்பு அமைச்சருக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தை தவிர்க்க அரசாங்கம் முயற்சி - ஐக்கிய மக்கள் சக்தி

01 Sep, 2025 | 02:30 PM
image

(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் வழங்கப்பட்ட எந்தவொரு வாக்குறுதியும் அரசாங்கத்தால் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் பிரதி பாதுகாப்பு அமைச்சருக்கெதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தை தவிர்ப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. இந்த விடயத்தில் சபாநாயகரின் மௌனம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

கொழும்பில்  திங்கட்கிழமை (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் வழங்கப்பட்ட எந்தவொரு வாக்குறுதியும் அரசாங்கத்தால் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

இவ்வாறான நிலைமையில் தான் தாக்குதல்கள் நடைபெற்ற போது கிழக்கு கட்டளை தளபதியாக செயற்பட்டவர் இன்று பிரதி பாதுகாப்பு அமைச்சராக பதவி வகிக்கின்றார். 

இதனை அடிப்படையாகக் கொண்டே சகல எதிர்க்கட்சிகளும் இணைந்து அவருக்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பித்தன.

ஆனால் சபாநாயகரால் இதுவரை இது தொடர்பில் எந்தவொரு அறிவித்தலும் வழங்கப்படவில்லை. இது பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு புறம்பானதல்ல என சட்டமா அதிபர் சபாநாயகருக்கு அறிவித்திருக்கின்றார். 

எனவே இது குறித்த விவாதத்துக்கு பொறுத்தமான தினமொன்றை சபாநாயகரால் ஒதுக்க முடியும். இது தொடர்பில் விவாதம் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணைகள் தொடர்பில் தெரிந்து கொள்ள வேண்டிய உரிமை பொது மக்களுக்கு உண்டு.

இந்த விவகாரத்தில் சபாநாயகரின் மௌனம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. நம்பிக்கையில்லா பிரேரணைக்கு அஞ்சப் போவதில்லை எனக் கூறும் அரசாங்கம் அதனை விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதற்கு ஏன் தயங்குகிறது? ஜே.வி.பி.யின் தேசிய பட்டியல் வேட்பாளரே இப்ராஹிம் ஆவார். 

இப்ராஹிம்மின் பிள்ளைகள் மற்றும் மருமகள் ஆகியோரே தற்கொலை குண்டு தாக்குதல்களின் பிரதான சந்தேகநபர்களாவர். இதற்கான நிதி உதவிகளை உள்நாட்டில் அவர்களே வழங்கியிருக்கின்றனர். 

அரசாங்கம் இந்த விவாதத்தை தடுப்பதற்கு முயற்சிக்கின்றதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. ஆனால் அவ்வாறு தடுப்பதற்கு அரசாங்கத்துக்கு எந்த உரிமையும் கிடையாது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த...

2025-12-15 00:42:07
news-image

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் விசேட அறிக்கை

2025-12-14 20:53:23
news-image

திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமி...

2025-12-14 22:49:10
news-image

அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்காக இலங்கை வந்த...

2025-12-14 22:04:01
news-image

கந்தளாய் குளத்தின் வான் கதவுகள் திறப்பு

2025-12-14 19:41:06
news-image

அரசாங்கத்தின் பங்களிப்பில் கல்வி பயின்று, பாராட்டுப்...

2025-12-14 19:51:08
news-image

இந்த நேரத்தில் கல்வி மாணவர்களுக்குச் சுமையாக...

2025-12-14 17:12:00
news-image

யாழில். தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின்...

2025-12-14 17:13:55
news-image

நாட்டிலிருந்து புறப்பட்டது அமெரிக்க குழு

2025-12-14 17:12:45
news-image

அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி...

2025-12-14 16:09:36
news-image

நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் உறுதியுடன் ஒன்றிணைந்து...

2025-12-14 16:09:19
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகனம் தீப்பிடித்து...

2025-12-14 15:32:01