கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி சுமார் 622 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், மீட்பு பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் இடிபாடுகளில் இருந்து காயமடைந்தவர்களை உலங்கு வானூர்திகளின் உதவியுடன் பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் 6 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் சுமார் ஆயிரத்து 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தாலிபான்களால் நடத்தப்படும் ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஆந்த நாட்டு வைத்தியசாலைகளின் புள்ளிவிவரங்களின் படி 400 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் பலர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த நாட்டு அமைச்சக செய்தியாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பணிகளில் அந்த நாட்டு மீட்பு பணியினரும், வைத்தியத்துறையினரும் இணைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM