நுவரெலியாவில் வரலாற்று சிறப்பு மிக்க ஹாவாஎலிய, ஸ்ரீநகர் ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் வருடாந்த தேர் திருவிழா நடைபெற்றது.
ஆலயத்தின் தேர்த்திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) ஆரம்பமானது. இரத பவனி ஆலயத்திலிருந்து அரோகரா கோஷங்களுடன் புறப்பட்டு நுவரெலியா பிரதான நகர் முழுவதும் வெளிவீதி உலா வந்ததையடுத்து, இன்று திங்கட்கிழமை (1) இரதமானது ஆலயத்தை சென்றடைந்தது.
இவ்வாலயத்தில் கடந்த 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றம் நடைபெற்று, தொடர்ச்சியாக பூஜைகள் நடத்தப்பட்டு வந்தது.

கடந்த சனிக்கிழமை (30) பாற்குட பவனி நடைபெற்று, 1008 சங்காபிஷேகம் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து அன்றைய தினம் பிற்பகல் மகேஸ்வர பூஜையுடன் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை (31) காலை தீ மிதிப்பு நடத்தப்பட்டது. தொடர்ந்து, உற்சவ மூர்த்திகளுக்கு வசந்த மண்டபத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
அடுத்து, மங்கள வாத்தியங்கள் முழங்க தேவார பாராயணங்கள் ஒலிக்க விநாயகப் பெருமான், முருகப் பெருமான், ஸ்ரீ கருமாரியம்மன், சோமாஸ்கந்த மூர்த்தி, சண்டேஸ்வரர் ஆகிய ஐந்து தெய்வங்களின் சிலைகள் தேரில் ஏற்றப்பட்டு, ஐந்து இரதங்களும் நுவரெலியா பிரதான நகரம் முழுவதும் பவனியாக சென்றது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்ட இந்த தேர்த் திருவிழாவின்போது காவடி, பறவைக் காவடி,கற்பூர சட்டி ஏந்துதல் போன்ற நேர்த்திக்கடன்களை பக்தர்கள் நிறைவேற்றினர்.
இதனையடுத்து, எதிர்வரும் புதன்கிழமை (3) தீர்த்தோற்சவமும் கரகம் வீதி உலாவும் நடைபெற்று, கொடியிறக்கத்துடன் விழா நிறைவடையவுள்ளது.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM