இன்றைய சூழலில் எம்மில் பலரும் நாளாந்த வாழ்க்கையில் சந்தோஷம் தரும் நட்பையும், உறவையும் புதிதாக ஏற்படுத்தி கொள்கிறோமோ... இல்லையோ... நாளாந்தம் வெறுப்புகளையும், புறகணிப்புகளையும் எதிர்கொள்கிறோம். இவர்களின் மூலமாக நாளாந்தம் எமக்கு தெரியாமலேயே எதிரிகளை ஏற்படுத்தி கொள்கிறோம்.
ஓர் எல்லைக்கு மேல்.. இந்த மறைமுக மற்றும் நேரடியான எதிரிகளின் தொல்லை - நெருக்கடி - அழுத்தம் - அதிகரிக்கத் தொடங்குகிறது. ஏற்கனவே பல சிக்கல்களை எதிர்கொண்டுள்ள எமக்கு இந்த எதிரிகளின் தொல்லை பாரிய உளவியல் பாதிப்பை உண்டாக்குகிறது. இந்நிலையில் இத்தகைய பாதிப்பிலிருந்து விடுபடுவதற்குரிய சூட்சமமான வழிபாட்டை எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் முன்மொழிந்திருக்கிறார்கள்.
அமாவாசை தினத்தன்று இரவு நேரத்தில் ஒரு தேங்காய் மூடியை தீயிட்டு, தணலாக இருக்கும் தருணத்தில் வீட்டிற்கு வெளியே வந்து வாசலில் வைத்து விட்டு... அதில் வெண் கடுகு- கல் உப்பு - ஆகிய இரண்டையும் இடது கைகளில் ஏந்தி உங்கள் தலையை மூன்று சுற்று சுற்றி எதிரியின் - அதாவது உங்களுக்கு தொல்லை கொடுக்கும் எதிரியின் - பெயரை மனதால் உச்சரித்து, 'அவன் என் பக்கமே திரும்பிப் பார்க்கக் கூடாது' என்று பிரார்த்தித்து ,அந்த நெருப்பில் போட்டு விட வேண்டும். கல் உப்பு தீயில் பட்டவுடன் வெடித்து சிதறும். சிறிது நேரம் காத்திருந்து ... அதன் பிறகு அந்த நெருப்புத் தணல்களை தண்ணீர் ஊற்றி அணைத்து, அதனை சேகரித்து, அருகில் இருக்கும் ஓடும் நதியில் விட்டு விட வேண்டும்.
அமாவாசை வரை காத்திருக்க இயலாதவர்கள் ...நெருக்கடி அதிகமாகவும், அழுத்தம் அதிகமாகவும் இருந்தால் ... ஞாயிற்றுக்கிழமைகளில் இதனை செய்தால் உங்களுக்கு தொல்லை கொடுத்த எதிரிகள் உங்களை விட்டு விலகி விடுவார்கள்.
தொகுப்பு: சுபயோக தாசன்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM