கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களை கௌரவிக்கும் வகையிலான விருது வழங்கும் விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 31 ஆம் திகதி யட்டியாந்தோட்டையில் நடைபெறவுள்ளது.
அபேக்ஷ நன்கொடை சங்கம் மற்றும் சிலாபம் ரோயல்ஸ் லயன்ஸ் கழகம் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன.
யட்டியாந்தோட்டை, தேகலச தோட்டத்தில் அமைந்துள்ள பாரதி தமிழ் மகா வித்யாலயத்தில் காலை 9 மணி முதல் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகளிலும், 2024 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையிலும் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு இந்த விழாவில் விருதுகள் வழங்கப்படவுள்ளன.
இந்த நிகழ்வில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூகத்தின் முக்கிய பிரமுகர்கள் என அனைவரும் கலந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ளனர். கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் இந்த நிகழ்வு, எதிர்கால தலைமுறையினருக்கு உத்வேகமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM