கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வடக்கு மாகாணத்திற்கான விசேட மகளீர் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு நீண்ட காலமாக இயங்காமல் இருப்பதனை கண்டித்தும். ஆதனை விரைவாக செயற்படுத்த கோரியும், அங்குள்ள அதி நவீன மருத்துவ உபகரணங்களை வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்லும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வெள்ளிக்கிழமை (29) வைத்தியசாலை வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட இவ்வார்ப்பாட்டத்தில் நெதர்லாந்து அரசாங்கத்தின் பல மில்லியன் ரூபா நிதியில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வடக்கு மாகாணத்திற்கான விசேட மகளீர் சிகிச்சை மையமானது அதி நவீன வசதிகளுடன் நவீன மருத்துவ உபகரணங்களுடனும் அமைக்கப்பட்டு 2024 மே மாதம் அன்றைய ஐனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது.
குறித்த சிகிச்சை மையம் திறக்கப்பட்டு ஒரு வருடத்தினை கடந்தும் இன்று வரை எந்தவொரு செயற்பாடும் இன்றி காணப்படுகிறது. இந்த சிகிச்சை மையத்தில் இரண்டு மகப்பேறு மற்றும் பிரசவ விடுதிகள், (கர்ப்பத்திற்கு முந்திய விடுதி, பிரசவத்திற்கு பிந்திய விடுதி). பெண் நோயியல் விடுதிகள், நவீன வசதிகள் கொண்ட அறுவை சிகிச்சை கூடம், மகப்பேறு தீவீர சிகிச்சைப் பிரிவு கருவள பெருக்கம் சிகிச்சைப் பிரிவு நோயாளர் கிளினிக் வளாகம் போன்றவற்றை கொண்டமைந்ததுள்ளது.
எனவே, இந்த சிகிச்சை மையம் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் போது இதுவரை காலமும் வடக்கு மாகாண்தில் இருந்து மேற்படி சிகிச்சைகளுக்கு கொழும்புக்கும் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் கடும் சிரமங்களுக்கு மத்தியில் சென்று வந்த பெண்கள் தங்களது காலடியிலேயே சிகிச்சை பெறும் சூழல் உருவாகும். இதனை தவிர வடக்கு மாகாண பெண்கள் மட்டுமன்றி எமது மாகாணத்தின் அருகில் உள்ள மாகாண பெண்களும் இதன் பயனை பெறுவார்கள்.
செயற்கை முறை கருத்தரித்தல், கர்ப்பகாலம், பிரசவகாலம், பிரசவத்திற்கு பிந்திய காலம், கருவில் உள்ள குழந்தைகளுக்கான சிகிச்சை, குழந்தை சிகிச்சை, மார்பக புற்றுநோய், கருப்பை கழுத்து புற்றுநோய்களை கண்டறிவதற்காக நவீன மருத்துவ உபகரண்ஙகள் என பெண்களுக்கான விசேட சிகிச்சை மையமாக இது அமைக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண பெண்களுக்கு கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டவில்லை என்பது போல வடக்கு மாகாண விசேட மகளீர் சிகிச்சை மையம் காணப்படுகிறது. இந்த சிகிச்சை மையத்தை செயற்படுத்துவதற்கு தற்போதுள்ள பிரதான தடையாக ஆளனியே காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக தாதியர்கள் இன்மைய இந்த சிகிச்சை மையத்தை இயங்கவைக்க முடியாதுள்ளது.
எல்லா வசதிகளும் இருந்தும் தாதியர்கள் உள்ளிட்ட ஆளனி வளம் இன்மையே இந்த சிகிச்சை மையத்தை இயங்க வைக்க முடியாதுள்ளது. தொடர்ச்சியாக செயற்பாடின்றி காணப்படுமாயின் இங்குள்ள பெறுமதிக்க மருத்துவ உபகரணங்கள் கூட பழுதடைய கூடிய வாய்ப்புக்கள் ஏற்படும் அத்தோடு, இந்த மருத்துவ உபகரணங்களின் பயன்பாடு இன்மையை காரணம் காட்டி நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு இந்த உபகரணங்களை வழங்குவதற்கான முயற்சிகளும் இடம்பெறுகிறது. வடக்கு வாழ் மக்களுக்கு என வழங்கப்பட்ட இந்த மருத்துவ உபகரணங்களை எக்காரணம் கொண்டு வெளியில் எடுத்துச் செல்ல அனுமதிக்க போவதில்லை எனவும் தெரிவித்தனர்.
இவ்வார்ப்பாட்டத்தின் கோரிக்கைகள் அடங்கிய மகஜர்கள் வடக்கு மாகாண ஆளுநர், மத்திய சுகாதார அமைச்சர் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM