கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் அதிகாரி ஒருவரை தண்ணீர் போத்தலினால் தாக்கிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு கோரி கடந்த 26 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதி மன்றத்தின் முன் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே இந்த தாக்குதல் இடம்பெற்றது.
சந்தேகநபர் நேற்று புதன்கிழமை (27) கைது செய்யப்பட்டு கொம்பனிவீதி பொலிஸாரிடம் ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் நாகொடை, களுத்துறை பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய முன்னாள் நகரசபை உறுப்பினர் என தெரியவந்துள்ளது.
மேலும், சந்தேகநபர் இன்று வியாழக்கிழமை (28) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன், கொம்பனி வீதி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM