வரலாற்று சிறப்பு வாய்ந்த, 400 ஆண்டுகள் பழமையான வட்டுக்கோட்டை துணைவி சிவன் ஆலய மகா கும்பாபிஷேகம் மிக விரைவில் நடைபெறவுள்ளதாக யாழ்ப்பாணம் மரபுரிமை மையம் தெரிவித்துள்ளது.
மிகத் தொன்மையான வழிபாட்டுத்தலமான வட்டுக்கோட்டை துணைவி சிவன் ஆலயம் பல ஆண்டுகாலம் கவனிப்பாரின்றி காணப்பட்ட நிலையில், அதனை மீள் உருவாக்கம் செய்வதற்குரிய பணிகள் யாழ்ப்பாணம் மரவுரிமை அமையத்தினால் கடந்த பெப்ரவரி மாதம் யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் வாழ்நாள் பேராசிரியர் புஸ்பரட்ணம் தலைமையில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்தப் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தினை அடைந்திருக்கும் நிலையில், ஆலயத்தில் மிக விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, அது மக்களின் வழிபாட்டுத்தலமாக்கப்படவுள்ளது.
அமெரிக்காவில் வசிக்கின்ற கைதடியினைச் சேர்ந்த கலாநிதி சிவயோகநாதனின் மகளும் Meta நிறுவனத்தில் பணிபுரிபவருமான பாலயோகஸ்தினி சிவயோகநாதன் இவ்வாலயத்தை பழைய நிலைக்கு மீள் உருவாக்கம் செய்வதற்குரிய நிதி உதவியினை வழங்கியிருந்த நிலையில் இந்த ஆலயம் மீள் எழுச்சி கண்டுள்ளது.
ஆலயத்தில் விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்தல், எண்ணெய்க் காப்பு சாத்தல், கும்பாபிஷேகம் தொடர்பான விபரங்கள் யாழ்ப்பாண மரபுரிமை மையத்தினரால் விரைவில் அறிவிக்கப்படும்.
எமது மரபுரிமைச் சின்னங்களைப் பாதுகாத்து, அவற்றை தலைமுறை தலைமுறையாக கடத்த வேண்டும் என்ற எண்ணப்பாட்டில் 2021ஆம் ஆண்டு அப்போதைய யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் காலத்தில் வரலாற்றுத்துறைப் பேராசிரியர் புஸ்பரட்ணம் தலைமையில் யாழ்ப்பாண மரபுரிமை மையம் உருவாக்கப்பட்டது.
நல்லூர் இராஜதானியின் தோரணவாசல் மீள் உருவாக்கம், ஆனைக்கோட்டை அகழ்வாராய்ச்சி போன்றவற்றினை நிறைவேற்றிய நிலையில், 400 வருடங்கள் பழமை வாய்ந்த வட்டுக்கோட்டை துணைவி சிவன் ஆலயத்தின் மீள் உருவாக்கப் பணியானது யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் மூன்றாவது செயற்றிட்டமாகும்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM