இலங்கை விமானப்படை உலங்கு வானூர்தி படைப்பிரிவுக்கு ஐ.நா. பாராட்டு

22 Aug, 2025 | 07:45 AM
image

(எம்.மனோசித்ரா)

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இலங்கை விமானப்படை உலங்கு வானூர்தி படைப்பிரிவுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாராட்டு தெரிவித்துள்ளது.

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இலங்கை விமானப்படை உலங்கு வானூர்தி படைப்பிரிவை, அதிக ஆபத்துள்ள மோதல் மண்டலத்தில் 'கேஸ் எவாகுவேஷன் அண்ட் எவாகுவேஷன்' நடவடிக்கையை வெற்றிகரமாக முடித்ததற்காக மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு அமைதி காக்கும் படையின் கட்டளை அதிகாரி பாராட்டினார்.

மேலும்,இலங்கை விமானப்படை உலங்கு வானூர்தி படைப்பிரிவின் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் உதித டி சில்வா தலைமையிலான 10 வது விமானப்படை அமைதி காக்கும் பிரிவிற்கு அமைதி காக்கும் நடவடிக்கைகளின் வெற்றிக்கு  , விமான ஆதரவை வழங்குவதில் அவர்களின் முறையான, அர்ப்பணிப்பு மற்றும் தொழில்முறை அணுகுமுறைக்காக பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

சட்ட விரோதமான செயல்பாட்டுப் பகுதியில்  நடந்த ஒரு நடவடிக்கையின் போது, தூசி மற்றும் வேகமாக மாறிவரும் நிலப்பரப்பு உள்ளிட்ட சவாலான சூழலில்  மத்தியில்  கடுமையாக காயமடைந்த மூன்று ஐ.நா. பணியாளர்களை ஆஐ-17 ஹெலிகாப்டரைப் பயன்படுத்தி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.  காயமடைந்தவர்கள் அவசர மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இலங்கை விமானப்படை உலங்கு வானூர்தி படைப்பிரிவு மேற்கொண்ட இந்த நடவடிக்கையைப் பாராட்டி, மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் கட்டளை அதிகாரி, இலங்கை விமானப்படை உலங்கு வானூர்தி படைப்பிரிவைப் பாராட்டினார். தலைமை விமானியாகப் பணியாற்றிய விங் கமாண்டர் இஷான் திப்போட்டுமுனுவே மற்றும் துணை  விமானியாகப் பணியாற்றிய விங் கமாண்டர் நதுன் டெனெட்டி ஆகியோர் இதில் அடங்குவர்.

இந்த நடவடிக்கைக்கு மேலாக, சவாலான மற்றும் ஆபத்தான சுற்றுச்சூழல் நிலைமைகள் இருந்தபோதிலும், இந்த குழுவினர்    இதுவரை  2024  டிசம்பர் முதல் 16 மீட்பு பணிகளை மேற்கொண்டு 18 உயிர்களைக் காப்பாற்றியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுமார் 300 கிலோ போதைப்பொருட்களுடன் 6...

2025-11-12 10:41:26
news-image

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பீடி இலைகளுடன்...

2025-11-12 10:22:56
news-image

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது!

2025-11-12 09:59:37
news-image

பெருந்தோட்ட மக்களுக்கான தீர்வுகளை மலினப்படுத்தும் எதிர்க்கட்சியின்...

2025-11-12 10:00:34
news-image

வளமான நாடு அழகான வாழ்க்கையை ஏற்படுத்துவதற்கு...

2025-11-12 09:38:17
news-image

குடும்ப நல சுகாதார சேவையில் எழுந்துள்ள...

2025-11-12 09:37:06
news-image

தமிழ் மக்களுக்கு அரசியல் நோக்கமின்றி அபிவிருத்தி...

2025-11-12 09:26:45
news-image

சுற்றுலா செல்லும் போது சமூக வலைதளங்களில்...

2025-11-12 09:25:43
news-image

அடுத்த வருடம் சுகாதார துறையில் பாரிய...

2025-11-12 09:23:49
news-image

இன்றைய வானிலை

2025-11-12 06:42:43
news-image

விதாதா வேலைத்திட்டத்தை அமுல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

2025-11-11 16:48:02
news-image

கிவுல் ஓயாத் நீர்த்தேக்க திட்டத்திற்கான நிதி...

2025-11-11 16:45:18