(எம்.ஆர்.எம் வசீம்,இராஜதுரை ஹஷான்)
பணச்சூதாட்டத்தை ஒழுங்குப்படுத்தல் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் இலங்கையில் சமூக பிரச்சினை தோற்றம் பெறும். தாய்லாந்து பட்டாயா என்று குறிப்பிட்டால் அனைவருக்கும் என்ன நினைவு வரும் என்பதை அறிவோம். கப்பல்களில் பணச்சூதாட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டால் தென்னாசியாவின் சூதாட்டமாக இலங்கை உலக வரைபடத்தில் சுட்டிக்காட்டப்படும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (19) நடைபெற்ற பணச்சூதாட்டத்தை ஒழுங்குப்படுத்தும் அதிகாரசபைச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
இலங்கையில் இதுவரை காலமும் நிலப்பரப்பில் தான் பணச்சூதாட்டம் நடத்தப்பட்டது. ஆனால் இந்த சட்டமூலம் சட்டமாக்கப்பட்டதன் பின்னர் இலங்கை கடற்பரபபில் நங்கூரமிடும் கப்பல்களில் பணச்சூதாட்டத்தை நடத்தப்படும். இலங்கை வரலாற்றில் இவ்வாறான நிலை முன்னொருபோதும் தோற்றம் பெறவில்லை.
பிற நாடுகளின் கப்பல்கள் இலங்கையின் துறைமுகத்தை அண்மித்த பகுதிகளில் அனுமதிப்பெற்ற வகையில் பணச்சூதாட்டத்தை நடத்த முடியும் இது பாரதூரமானது.
இந்து சமுத்திரத்தில் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான தன்மை காணப்படுகிறது. இந்த சட்டத்தால் இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கும்,பூகோள அரசியலுக்கும் பாரிய பாதிப்பு ஏற்படலாம்.
சீன நாட்டு கப்பல் அனுமதி பெற்று திருகோணமலை துறைமுகத்தை அண்மித்த கடற்பரப்பில் நங்கூரமிட்டு பணச்சூதாட்டத்தை நடத்த முடியும்.
சூதாட்டத்தின் ஊடாக அரச வருமானத்தை ஈட்டிக்கொள்ள வேண்டுமாயின் பிரதான கசினோ தரப்பினரிடமிருந்து 2015-2023 ஆண்டுக்கான நிலுவை வரியை அரசாங்கம் அறவிட வேண்டும்.இதற்கான எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் சமூக பிரச்சினையும் தோற்றம் பெறும். தாய்லாந்து பட்டாயா என்று குறிப்பிட்டால் அனைவருக்கும் என்ன நினைவு வரும் என்பதை அறிவோம்.
கப்பல்களில் பணச்சூதாட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டால் தென்னாசியாவின் சூதாட்டமாக இலங்கை உலக வரைபடத்தில் சுட்டிக்காட்டப்படும். சட்டமூலத்தில் கப்பல் என்ற சொல் மறைக்கப்பட்டுள்ளது. என்றார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM