நல்லூர் மாம்பழத்திருவிழா

19 Aug, 2025 | 03:54 PM
image

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழாவின் 22ஆம் திருவிழாவான  செவ்வாய்க்கிழமை (19) காலை  மாம்பழத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

காலை 6.45 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து பிள்ளையாரும் முருகபெருமானும் வெளிவீதியுலா வந்து சிறப்பாக மாம்பழ திருவிழா நடைபெற்றது.

நாரதர் சிவபெருமானுக்கும் , உமாதேவியாருக்கும் ஒரு மாம்பழத்தை கொடுத்தார். அதனை யாருக்கு கொடுப்பது என தீர்மானிக்க , முதலில் உலகை சுற்றி வருபவருக்கே இந்த மாம்பழத்தை தருவோம் என சிவபெருமானும் உமாதேவியாரும் , பிள்ளையாருக்கும் , முருகனுக்கும் கூறினார்கள்.

உடனே முருகபெருமான் மயில் மீதேறி உலகை சுற்றி வர சென்ற போது , பிள்ளையார் சிவபெருமானையும், உமாதேவியாரையும் சுற்றி வந்து நீங்களே என் உலகம் என கூறி மாம்பழத்தை பெற்றுக்கொண்டார்.

உலகை சுற்றி வந்த முருகனுக்கு மாம்பழம் கிடைக்காததால் தனது நகை, உடை அனைத்தையும் துறந்து பழனி மலையில் போய் அமர்ந்தார். எனும் புராண கதையை மையமாக வைத்தே இந்த திருவிழா இடம்பெற்று வருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஊடகவியலாளர் மு.தமிழ்ச்செல்வனின்  நஞ்சாகும் நிலம் நூலுக்கு...

2025-12-17 01:26:15
news-image

கிழக்கு மாகாணத்தில் பெண்கள் அபிவிருத்தி மற்றும்...

2025-12-16 16:43:41
news-image

குரு சுவாமி ஆ. ரவீந்திரனின் பிறந்தநாளை...

2025-12-16 14:41:00
news-image

புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர்...

2025-12-14 21:20:10
news-image

'மீஸான் ஹாஜியாரின் பாரம்பரியம்' எனும் தலைப்பிலான...

2025-12-14 20:54:15
news-image

கொழும்பு புனித பேதுருவானவர் கல்லூரி ‘Colours...

2025-12-15 13:29:07
news-image

கொழும்பு இந்து மகளிர் மன்றத்தின் நிவாரண...

2025-12-13 10:09:15
news-image

கலைஶ்ரீ கலைமன்றம் நடத்தும் "பாடுவோர் பாடலாம்...

2025-12-13 09:48:45
news-image

தமிழகத்தில் இடம்பெறவுள்ள ஸ்ரீமதி.வாசுகி ஜெகதீஸ்வரனின் நடன...

2025-12-13 09:15:31
news-image

பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் எழுதிய 'தமிழ்த்...

2025-12-09 17:10:46
news-image

இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட, உயிரிழந்தவர்களுக்காக சர்வமத...

2025-12-09 19:57:19
news-image

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பிரார்த்தனைகள்!

2025-12-09 10:20:33