பரந்தனில் விபத்தை ஏற்படுத்திய டிப்பர் சாரதி போதையில் இருந்ததாக மருத்துவ அறிக்கையில் உறுதி - நீதிமன்றம்

19 Aug, 2025 | 06:55 PM
image

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் விபத்தை ஏற்படுத்திய டிப்பர் வாகனத்தின் சாரதி விபத்தின் போது போதைப்பொருள் பாவனைக்கு உட்பட்டிருந்தார் என மருத்துவ அறிக்கை மூலம் உறுதியாகியதுடன் டிப்பர் வாகனத்தின் உரிமையாளரையும் மன்றில் ஆஜர் படுத்துமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த மாதம் 31 ஆம் திகதி கிளிநொச்சி ஏ-09 வீதியின் பரந்தன் சந்திக்கு அண்மித்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் கிளிநொச்சி நோக்கி சென்ற பெண் ஒருவரை அதே திசையில் வந்த டிப்பர் வாகனம் மோதியதில்  குறித்த விபத்து இடம்பெற்றத்துடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

இந்த விபத்துடன் தொடர்புபட்ட டிப்பர் வாகனத்தின்  சாரதி கைது செய்யப்பட்டு செவ்வாய்க்கிழமை  (19) கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில்   முற்படுத்திய போது குறித்த சாரதி வாகனத்தை செலுத்தும் போது போதைப்பொருள் பாவனைக்கு உட்பட்டிருந்தார் என்பதுடன் நுகேகொட வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டிருந்த அவரது இரத்த மாதிரிகளில் அவர் விபத்தின் போது போதைப் பொருளை உள்ளெடுத்திருந்தார் என்பது தொடர்பான அறிக்கையும் இன்றைய தினம் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து குறித்த சந்தேக நபரை எதிர்வரும் மாதம் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடடுள்ளதுடன் டிப்பர் வாகனத்தின் உரிமையாளரையும் சந்தேக நபராக மன்றில் முன்னிலைப்படுத்துமாறும் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. 

குறித்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் ஆஜராகி இருந்தார். குறித்த டிப்பர் வாகனங்களால் ஏற்படும் விபத்துக்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் இவ்வாறான விபத்துக்கள் பொறுப்பற்ற செயலாலே நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிஜிட்டல் நிர்வாக, ஊழல் ஒழிப்பு நடவடிக்கை...

2026-07-22 18:14:00
news-image

ஜப்பான் அரசின் கடன் உதவித் திட்டத்தின்...

2026-07-22 12:54:12
news-image

இலங்கை பட்டய ஊடகவியலாளர் நிறுவனத்தை உருவாக்கும்...

2026-07-22 17:34:35
news-image

காய்ச்சல் ஏற்பட்டால் காலம் தாமதிக்காமல் உடனடியாக...

2026-07-22 14:18:56
news-image

ஜனாதிபதி மாளிகைகளை பயனுள்ள முறையில் பயன்படுத்த...

2026-07-22 14:50:18
news-image

ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை...

2026-07-22 14:49:18
news-image

புதுப்பிக்கத்தக்க மின்சாரக் கட்டண நிர்ணயத்துக்கான மக்கள்...

2026-07-22 14:52:16
news-image

புகையிரத சேவையை நவீனமயமாக்க 2027–2029 அபிவிருத்தித்...

2026-07-22 23:07:26
news-image

வடிகாண்களை மக்கள் அபகரித்து தடைகளை ஏற்படுத்துவதால்...

2026-07-22 15:49:49
news-image

பகிடிவதையால் ஒருவர் உயிரிழப்பு, 106 பேர்...

2026-07-22 14:52:40
news-image

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அரசியல் கைதிகள்...

2026-07-22 16:01:58
news-image

சஜித் - ரணில் பங்கேற்புடன் நாளை...

2026-07-22 16:02:17