கரடியனாறு பகுதியில் பதற்றம் ; பொலிஸார் - மக்களுக்கிடையில் மோதல்

Published By: Priyatharshan

24 Jul, 2017 | 03:37 PM
image

மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தையடுத்து அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் சட்டவிரோதமாக  ஆற்று மணல் ஏற்றியவர்கள்  மீது விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில்  ஆற்றில் பாய்ந்து தப்பிக்க முயன்றவர்  உயிரிழந்துள்ளதாகவும் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து ஒன்று கூடிய பிரதேச மக்கள் வீதிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் போராட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் மக்கள் மீது பொல்லுகள் மற்றும் தடியப் பிரயோகங்களை மேற்கொண்ட நிலையில் குறித்த பகுதியில் போராட்டம்  தீவிரமடைந்து பதற்ற நிலையை தோற்றுவித்துள்ளது.

இந்நிலையில் மக்களைக் கலைப்பதற்காக பொலிஸார் வானை நோக்கித்  துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ள நிலையில் பொதுமக்களும் பொலிஸார் மீது பதில் தாக்குதலை மேற்கொண்டு வருகதாகவும் அப்பகுதியில் தொடர்ந்தும் பதற்ற நிலையுள்ளதாகவும் அங்கிருக்கும் எமது இணையத்தள செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00