12 வயது சிறுவன் ஒருவன் தனது 4 வயது தங்கையை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய பின்னர், அந்த சம்பவம் தொடர்பில் வெளியில் கூறாதிருப்பதற்கு அந்த சிறுமிக்கு இனிப்புகளை இலஞ்சமாக வழங்கிய அதிர்ச்சியூட்டும் சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
கடந்த வருடம் ஜனவரி மாதத்துக்கும் ஆகஸ்ட் மாதத்துக்குமிடையில் கிழக்கு சஸக்ஸ் பிராந்தியத்தில் இடம்பெற்ற மேற்படி சம்பவம் ஒரு வருடத்திற்குப் பின்னர் அம்பலமாகியுள்ளது.
தற்போது அந்த சிறுமியின் வயது ஐந்தாகும். அவரது சகோதர முறையான சிறுவனது வயது 13 ஆகும்.
ஒரு வருடத்திற்கு முன்னர் ஓடி ஒளிந்து விளையாடும் விளையாட்டை விளையாடிய போதே அந்த சிறுவன் முதல் தடவையாக அந்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளான்.
இந்நிலையில் அண்மையில் அந்த சிறுமி குளியலில் ஈடுபட்ட போது தனது தாயாரிடம் தன்னிடம் தனது சகோதர முறையான குறிப்பிட்ட சிறுவன் நடந்து கொண்ட முறை குறித்து விபரிக்கவும் தாயார் அதிர்ச்சியடைந்துள்ளார்.
தொடர்ந்து சிறுமியின் தாயார் செய்த முறைப்பாட்டையடுத்து அது தொடர்பான வழக்கு விசாரணை கிழக்கு சஸக்ஸிலுள்ள பிறைட்டன் நீதிமன்றத்தில் இடம்பெற்ற போது அந்தத் தாயார் கண்ணீர் மல்க சாட்சியமளித்தார்.
ஆரம்பத்தில் அந்த சிறுவன் தனது மகளிடம் அளவுகதிகமான பாசம் காட்டி வந்ததாகவும் இதன்போது சிறுவனுடன் பழகுவதில் விருப்பம் கொண்டிருந்த மகள் கடந்த ஒரு வருட காலமாக அந்த சிறுவன் தொடர்பில் வெறுப்பை வெளிப்படுத்தி வந்ததாகவும் அந்தத் தாய் தெரிவித்தார்.
சிறுவனது அத்துமீறிய செயற்பாட்டால் அச்சமடைந்திருந்த போதும் அவனால் வழங்கப்பட்ட இனிப்புகள் மீது இருந்த நாட்டம் காரணமாக சிறுமி தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தலை மறைத்து வந்திருந்ததாக அந்தத் தாய் கூறினார்.
இந்நிலையில் அந்த சிறுவன் இனிப்பை வழங்கி தன்னை பல தடவைகள் துஷ்பிர யோகப்படுத்தியதாக அந்த சிறுமி கூறியதாக அந்தத் தாய் நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்தார்.
அண்ணனும் தங்கையும் விளையாடுகிறார்கள் என தானும் குடும்பத்தினரும் அவர்களைக் கண்காணிக்காது அலட்சியமாக இருந்ததாக அவர் மேலும் கூறினார்.
இந்த வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் ஆகஸ்ட் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM