4 வயது தங்­கையை பாலியல் வல்­லு­ற­வுப்படுத்தி இலஞ்­ச­மாக இனிப்பை வழங்­கிய 12 வயது சிறுவன்

Published By: Robert

24 Jul, 2017 | 09:25 AM
image

 12 வயது சிறுவன் ஒருவன் தனது 4  வயது தங்­கையை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­திய பின்னர், அந்த சம்­பவம் தொடர்பில் வெளியில் கூறா­தி­ருப்­ப­தற்கு  அந்த சிறு­மிக்கு இனிப்­புகளை இலஞ்­ச­மாக வழங்­கிய அதிர்ச்­சி­யூட்டும் சம்­பவம்  பிரித்­தா­னி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது. 

கடந்த வருடம் ஜன­வரி மாதத்­துக்கும் ஆகஸ்ட் மாதத்­துக்­கு­மி­டையில்  கிழக்கு சஸக்ஸ்  பிராந்­தி­யத்தில் இடம்­பெற்ற மேற்­படி சம்­பவம்  ஒரு­ வ­ரு­டத்­திற்குப் பின்னர்  அம்­ப­ல­மா­கி­யுள்­ளது.

 தற்­போது அந்த  சிறு­மியின் வயது ஐந்­தாகும்.  அவ­ரது சகோ­தர முறை­யான சிறு­வ­னது வயது 13  ஆகும்.

 ஒரு வரு­டத்­திற்கு முன்னர் ஓடி  ஒளிந்து விளை­யாடும் விளை­யாட்டை விளை­யா­டிய போதே அந்த சிறுவன் முதல் தட­வையாக அந்த சிறு­மியை பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்­துள்ளான்.

இந்­நி­லையில் அண்­மையில்  அந்த சிறுமி  குளி­யலில் ஈடு­பட்ட போது தனது தாயா­ரிடம் தன்­னிடம் தனது சகோ­தர முறை­யான குறிப்­பிட்ட சிறுவன் நடந்து கொண்ட முறை குறித்து  விப­ரிக்­கவும்  தாயார் அதிர்ச்சி­ய­டைந்­துள்ளார்.

தொடர்ந்து   சிறு­மியின் தாயார்  செய்த முறைப்­பாட்­டை­ய­டுத்து  அது தொடர்­பான வழக்கு விசா­ரணை  கிழக்கு சஸக்­ஸி­லுள்ள  பிறைட்டன் நீதி­மன்­றத்தில்  இடம்­பெற்ற போது அந்தத் தாயார் கண்ணீர் மல்க சாட்­சி­ய­ம­ளித்தார்.

 ஆரம்­பத்தில் அந்த சிறுவன் தனது மக­ளிடம் அள­வு­க­தி­க­மான பாசம் காட்டி  வந்­த­தா­கவும் இதன்­போது  சிறு­வ­னுடன் பழ­கு­வதில்  விருப்பம் கொண்­டி­ருந்த  மகள் கடந்த ஒரு வருட கால­மாக அந்த சிறுவன் தொடர்பில் வெறுப்பை வெளிப்­ப­டுத்தி வந்­த­தா­கவும்  அந்தத் தாய் தெரி­வித்தார்.

 சிறு­வ­னது அத்­து­மீ­றிய செயற்­பாட்டால் அச்­ச­ம­டைந்­தி­ருந்த போதும் அவனால் வழங்­கப்­பட்ட இனிப்­புகள் மீது இருந்த நாட்டம் கார­ண­மாக சிறுமி தனக்கு நேர்ந்த பாலியல் துன்­பு­றுத்­தலை  மறைத்து வந்­தி­ருந்­த­தாக அந்தத் தாய் கூறினார்.

இந்­நி­லையில் அந்த சிறுவன் இனிப்பை வழங்கி தன்னை பல தட­வைகள் துஷ்­பி­ர­ யோ­கப்­ப­டுத்­தி­ய­தாக அந்த சிறுமி கூறி­ய­தாக அந்தத் தாய் நீதி­மன்­றத்தில் மேலும் தெரிவித்தார்.

அண்­ணனும் தங்­கையும் விளை­யா­டு­கி­றார்கள் என  தானும் குடும்­பத்­தி­னரும் அவர்களைக் கண்­கா­ணிக்­காது   அலட்­சி­ய­மாக இருந்­த­தாக அவர் மேலும் கூறினார்.

 இந்­த வழக்கு தொடர்­பான அடுத்த கட்ட விசா­ரணை எதிர்­வரும்  ஆகஸ்ட் 16  ஆம் திக­திக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32