(இராஜதுரை ஹஷான்)
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை மூடிமறைப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது.பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கை பிரேரணை அரசாங்கத்துக்கு விடுக்கும் ஒரு எச்சரிக்கையாகும் என்பதால் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும்,பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் புதன்கிழமை (13) நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் விவகாரம் முழுமையாக அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது. குண்டுத்தாக்குதலை பிரதான அரசியல் பிரச்சாரமாக்கியே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ , கோட்டபய ராஜபக்ஷ மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் ராஜபக்ஷர்கள் மீது முன்வைத்த குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் சட்டத்தின் முன் நிரூபிக்க வேண்டும்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை மூடிமறைப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது.பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கை பிரேரணை அரசாங்கத்துக்கு விடுக்கும் ஒரு எச்சரிக்கையாகும் என்பதால் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளோம்.
குண்டுத்தாக்குதலின் பிரதான தற்கொலைதாரிகளின் தந்தை மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்.அவருக்கு எதிராக கட்சி மட்டத்தில் எவ்வித நடவடிக்கைகளும் இதுவரையில் எடுக்கப்படவில்லை.குண்டுத்தாக்குதலின் உண்மை வெளிவர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளோம் என்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM