(நெவில் அன்தனி)
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்பட்டு வரும் எஸ்எல்சி ரி20 லீக் (SLC T20 League) உள்ளூர் மும்முனை கிரிக்கெட் தொடரில் தனது முதல் 3 போட்டிகளில் வெற்றியீட்டிய டீம் க்றீன்ஸ் முதலாவது அணியாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றுள்ளது.
இதேவேளை, இறுதிப் போட்டியில் விளையாடவுள்ள அணியை எஸ்எஸ்சி மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள டீம் க்றேஸ் - டீம் ப்ளூஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி பெரும்பாலும் தீர்மானிக்கவுள்ளது.
இந்த மும்முனை கிரிக்கெட் போட்டியில் முதல் சுற்றில் டீம் ப்ளூஸ் அணியை 4 விக்கெட்களாலும், டீம் க்றேஸ் அணியை 5 விக்கெட்களாலும் இரண்டாம் சுற்றில் டீம் ப்ளூஸ் அணியை 72 ஓட்டங்களாலும் டீம் க்றீன்ஸ் வெற்றிகொண்டது.
டீம் க்றேஸ் அணி முதல் சுற்றில் டீம் ப்ளூஸ் அணியை 24 ஓட்டங்களால் வெற்றிகொண்டிருந்தது.
இந்த போட்டி முடிவுகளின் பிரகாரம் டீம் க்றீன்ஸ் அணி 6 புள்ளிகளுடன் தோல்வி அடையாத அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளதுடன் அவ்வணிக்கு டிம் க்றேஸ் அணியுடனான இரண்டாம் சுற்று போட்டி எஞ்சியுள்ளது. அப் போட்டி நாளை நடைபெறவுள்ளது.

நான்கு வீரர்களே ஓரளவு பிரகாசிப்பு
ஸிம்பாப்வேக்கு எதிரான ரி20 தொடர், ரி20 ஆசிய கிண்ணம் ஆகியவற்றுக்கு அதிசிறந்த விரர்களைத் தேர்வுசெய்யும் நோக்கத்துடன் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் எஸ்எல்சி ரி20 லீக் தொடரை ஏற்பாடு செய்து நடத்திவருகிறது.
ஆனால், குறிப்பிட்டு சொல்லுமளவுக்கு எந்தவொரு வீரரும் மிகச் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்தவில்லை.
சாமிக்க கருணாரட்ன சகலதுறைகளிலும் நுவனிது பெர்னாண்டோ துடுப்பாட்டத்திலும் அக்கல தனஞ்சய, நுவன் துஷார ஆகியோர் பந்துவீச்சிலும் ஓரளவு பிரகாசித்துள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை வரை நடைபெற்று முடிந்துள்ள 4 போட்டிகளில் நுவனிது பெர்னாண்டோ (70), சரித் அசலன்க (59), காமில் மிஷார (52), நிரோஷன் திக்வெல்ல (52), கமிந்து மெண்டிஸ் (50) ஆகிய ஐவரே தலா ஒரு அரைச் சதம் பெற்றுள்ளனர்.
பந்துவீச்சில் அக்கில தனஞ்சய, நுவன் துஷார ஆகிய இருவரும் தலா 5 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளனர். துஷான் ஹேமன்த, ஏஷான் மாலிங்க ஆகிய இருவரும் தலா 4 விக்கெட்களை வீழ்த்தியுள்ளதுடன் அவர்கள் இருவரே ஒரு போட்டியில் 4 விக்கெட் குவியல்களைப் பதிவு செய்துள்ளனர்.

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM