அரசாங்கத்தை கவிழ்க்க யாரும் சூழ்ச்சி செய்யவில்லை ; மக்கள் விரைவில் அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணைவார்கள் – இந்திக அனுருத்த

12 Aug, 2025 | 04:57 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு எவரும் சூழ்ச்சி செய்யவில்லை. ஆட்சிக்கு வருவதற்கு தேசிய மக்கள் சக்தி மக்களுக்கு குறிப்பிட்ட போலியான வாக்குறுதிகள் மற்றும் வெறுப்புக்கள் அரசாங்கத்துக்கு எதிரானதாக அமையும். நாட்டு மக்கள் வெகுவிரைவில் அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணைவார்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில்  செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த வாரம் பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் அரசாங்கத்தை வீழ்;த்துவதற்கு எதிர்க்கட்சிகள் சூழ்ச்சி செய்வதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார். 

குறைகளையும், விமர்சனங்களையும் தாங்கிக்கொள்ளும் மனநிலை ஜனாதிபதிக்கோ அல்லது அரசாங்கத்துக்கோ கிடையாது. அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு எவரும் சூழ்ச்சி செய்யவில்லை.

ஆட்சிக்கு வருவதற்கு தேசிய மக்கள் சக்தி மக்களுக்கு குறிப்பிட்ட போலியான வாக்குறுதிகள் மற்றும் வெறுப்புக்கள் அரசாங்கத்துக்கு எதிரானதாக அமையும்.நாட்டு மக்கள் வெகுவிரைவில் அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணைவார்கள்.

முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது மகன்கள் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி காலங்களில் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது. அந்த குற்றச்சாட்டுக்கள் பொய் என்று அவர்களே குறிப்பிடும் காலம் தற்போது தோற்றம் பெற்றுள்ளது. செயற்கைகோள் திட்டம் தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் வெளிப்படுத்திய உண்மை பாராட்டத்தக்கது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாணவர்களுக்கும் தலைக்கவசம் அவசியம்!! பெற்றோர்களுக்குப் வவுனியா...

2026-07-15 10:36:22
news-image

அரசாங்கத்திற்கு எதிராக ஐநாவில் முறைப்பாடு

2026-07-15 10:20:57
news-image

முல்லைத்தீவில் சட்டவிரோதமாக சேமித்து வைக்கப்பட்டிருந்த மதுபானப்...

2026-07-15 10:23:04
news-image

யாழ். காக்கை தீவு மீள் சுழற்சி...

2026-07-15 10:16:12
news-image

இலங்கை அரசியல்வாதிகள் நீண்ட ஆயுளுடன் வாழ்கின்றனர்...

2026-07-15 10:20:16
news-image

யாழ். காரைநகரில் வெளிநாட்டவர்களின் நகைகள், பணங்களை...

2026-07-15 09:52:17
news-image

புதுக்குடியிருப்பில் விடுதலைப் புலிகளின் புதையல் இருப்பதாக...

2026-07-15 09:44:34
news-image

வெவ்வேறு பகுதிகளில் இரண்டு சடலங்கள் மீட்பு...

2026-07-15 09:04:38
news-image

மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத்...

2026-07-15 09:01:45
news-image

காளான் பயிர்ச்செய்கையாளர்களுக்கு புதிய காப்புறுதித் திட்டம்...

2026-07-15 08:55:48
news-image

இன்றைய வானிலை 

2026-07-15 06:53:39
news-image

யாழ். கல்வி அபிவிருத்தி உப குழுக்...

2026-07-15 06:52:10