(நா.தனுஜா)
தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டிணைவானது சுமார் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக பிராந்திய ஸ்திரத்தன்மை, பொருளாதார மேம்பாடு, பாரம்பரிய கலாசார பகிர்வு என்பவற்றுக்கான அடிப்படையாகத் திகழ்வதாக வெளிவிவகார, வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.
தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டிணைவு (ஆசியான்) தின நிகழ்வை முன்னிட்டு இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் டெவி கஸ்டினா ரொபிங், இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் பைற்றூன் மஹபன்னபோன், இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் ட்ரின் தி ராம், இலங்கைக்கான மியன்மார் தூதுவர் டௌ மார்லர் தான் டைக் ஆகியோருடன் இணைந்து இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் பட்லி ஹிஷாம் அடமினால் வெள்ளிக்கிழமை (08) கொழும்பிலுள்ள ஷங்ரிலா ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவு விருந்துபசாரத்தில் பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.
இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர, தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டிணைவானது சுமார் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக பிராந்திய ஸ்திரத்தன்மை, பொருளாதார மேம்பாடு, பாரம்பரிய கலாசார பகிர்வு என்பவற்றுக்கான அடிப்படையாகத் திகழ்வதாகத் தெரிவித்துள்ளார்.
அத்தோடு வர்த்தம் மற்றும் முதலீடுகளை விரிவுபடுத்துவதற்கும், சமுத்திரப்பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்கும், காலநிலைமாற்ற சவால்களை எதிர்கொள்வதற்கான இயலுமையை அதிகரிப்பதற்கும், மக்களுக்கு இடையிலான தொடர்புகளை விரிவுபடுத்துவதற்கும் தெற்காசிய நாடுகளின் கூட்டிணைவுடன் மிகநெருங்கிப் பணியாற்றுவதற்குத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM