சபாநாயகருக்கு எதிராக ஜெனீவாவில் முறைப்பாடளிப்பதற்கு தீர்மானம் ; எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நடவடிக்கை

Published By: Digital Desk 2

08 Aug, 2025 | 04:51 PM
image

(எம்.மனோசித்ரா)

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்றத்தில் கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு சபாநாயகரால் நியாயமான காலம் வழங்கப்படாமை உட்பட முக்கிய காரணிகளை சுட்டிக்காட்டி சுவிஸர்லாந்தின் ஜெனீவா நகரிலுள்ள பாராளுமன்ற குழுக்களுக்கிடையிலான ஒன்றியத்திடம் முறைப்பாடளிப்பதற்கு எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.

எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்க்கட்சிகளின் கட்சி தலைவர்கள் கூடிய போது சில விடயங்கள் தொடர்பில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அவற்றில் ஒன்று பிரதி பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட்டு அதனை சபாநாயகரிடம் கையளிப்பதாகும்.

அடுத்தது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உரையாற்றும் போது ஆளுந்தரப்பினரால் இடையூறு ஏற்படுத்தப்படுவதோடு, சபாநாயகரால் முறையாக நேரம் வழங்கப்படாமை குறித்து முறைப்பாடளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைய இதற்கு எதிராக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இணைந்து பாராளுமன்ற குழுக்களுக்கிடையிலான ஒன்றியத்திடம் முறைப்பாடளிப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம்.

எதிர்க்கட்சி தலைவருக்கு மாத்திரமின்றி, எதிர்க்கட்சியின் ஏனைய உறுப்பினர்களுக்கும் உரிய நேரம் வழங்கப்படாமை குறித்தும் முறைப்பாடளிக்கவுள்ளோம். இவை மாத்திரமின்றி புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமிப்பதற்கு வலியுறுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

அதற்கான கையெழுத்து பெறுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் அவற்றை நிறைவு செய்து அடுத்த கட்ட நகர்வுகளை முன்னெடுப்போம். நம்பிக்கையில்லா பிரேரணையில் அடுத்த வாரத்துக்குள் கையெழுத்துக்களைப் பெற்று கையளிப்போம். ஏனைய நடவடிக்கைகளும் ஓரிரு வாரங்களுக்குள் நிறைவடையும். ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இதற்காக ஒருங்கிணைப்பிற்கான பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2025இல் முல்லைத்தீவில் 8,220.49 மெற்றிக்தொன் மீன்கள்...

2026-08-12 17:12:16
news-image

ஜப்பான் தூதரகப் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத்...

2026-08-12 16:57:08
news-image

வெளிப்படைத்தன்மை கொண்ட நீண்டகால முதலீடுகளுக்கு இலங்கையின்...

2026-08-12 16:42:09
news-image

இலங்கையில் இன்னும் ஆயுர்வேத சுற்றுலா அபிவிருத்தி...

2026-08-12 16:40:30
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 3 வாகனங்கள்...

2026-08-12 16:38:31
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திங்கட்கிழமை கொடியேற்றம்...

2026-08-12 16:14:25
news-image

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் தீர்மானத்தை...

2026-08-12 15:52:14
news-image

பரீட்சைகள் திணைக்களத்துக்கும் ஹேக்கர் அச்சுறுத்தல்

2026-08-12 15:14:48
news-image

எல் நினோ தீவிரமடைய 81 சதவீதம்...

2026-08-12 14:57:07
news-image

கடற்படைத் தளபதியை சந்தித்தார் பாகிஸ்தான் தூதரக...

2026-08-12 14:56:29
news-image

மடுத் திருத்தலத்தின் பாரம்பரியங்களை பாதுகாக்க வேண்டும்;...

2026-08-12 14:55:46
news-image

ஜனாதிபதி நிதியம் தாமதம்: 25,000க்கும் அதிகமான...

2026-08-12 14:30:06