யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் புதிய துறையாக உருவாகியிருக்கும் ஆங்கில மொழி கற்பித்தல் துறை தனது முதலாவது சர்வதேச மாநாட்டை எதிர்வரும் 11ம் திகதி முதல் 13ம் திகதி வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடாத்த உள்ளது.
அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகம், நியூஸ்லாந்து ஒக்லாண்ட் பல்கலைக்கழகம், லண்டன் பல்கலைக்கழகம், ஹொங்கொங் பல்கலைக்கழகம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இருந்து வருகைதரும் பேராசிரியர்கள் இம்மாநாட்டில் ஆதார சுருதி உரைகளையும் பேருரைகளையும் ஆற்றவுள்ளனர்.
‘ஆங்கிலத்தின் காலனிய நீக்கம்’ பற்றியதான கருப்பொருளில் நடாத்தப்படும் இம்மாநாடு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழி கற்பித்தல் பிரிவின் முன்னாள் தலைவராக இருந்தவரும் தற்போது பென்சில்வேனியா பல்கலைக்கழகப் பேராசிரியராக பணியாற்றுபவருமான கலாநிதி சுரேஸ் கனகராஜாவின் ஒழுங்கமைப்பு வழிகாட்டலில் நடைபெறவுள்ளது.
துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையிலும், கலைப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் மற்றும் ஆங்கில மொழி கற்பித்தல் துறைத் தலைவர் கலாநிதி கி. சண்முகநாதன் ஆகியோரின் இணைத் தலைமையிலும் ஒழுங்கமைக்கப்பட்ட இம்மாநாட்டில் மொத்தம் 96 ஆய்வுக்கட்டுரைகள் பல்வேறு நாட்டு ஆய்வாளர்களாலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
ஆங்கிலத் துறை சார்ந்த ஆர்வலர்கள், ஆசிரியர்கள், மாணவர்களை 11.08.2025 அன்று காலை 8.30 மணி முதல் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறும் இம்மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு மாநாட்டின் இணைப்பாளர் பேராசிரியர் கந்தையா சிறிகணேசன் அழைப்புவிடுத்துள்ளார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM